சுற்றியே விழுவதுமில்லை !
வெற்றிடம் நிறந்த காற்றை - கண்ணால்
உற்றினும் காணுவதில்லை !
சூரியன் கதிரின் வெம்மை - வாங்கிடும்
வெண்ணிலா சுடுவதுமில்லை !
ஆழியின் கரையைத் தொட்டு - ஆடிடும்
அலைகளும் ஓயுவதில்லை !
மின்னலின் கீற்று பாய்ந்தும் - வானில்
விரிசல்கள் விழுவதுஇல்லை !
பின்னலாய் வருமழைத் துளிகள் - மண்ணை
ஒருசேர நனைப்பதுமில்லை !
மழையிலே நனைகிற போதும் -பூவின்
வண்ணமும் நீங்குவதில்லை !
இதையெலாம் செய்திடும் மாயன் - அந்த
இறைவனின் நிகரதுஇல்லை !
அருமையான கவிதை இறைவனின் நிகருக்கு ஏதுமில்லை.
ReplyDeleteதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி !
Deleteவணக்கம்
ReplyDeleteஅண்ணா
கற்பனை நன்று.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-நன்றி-
நன்றிகள் ரூபன்!
Deleteநன்றி நண்பரே ! தொடர்ந்து வரவும்
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDelete