.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, August 28, 2014

பிள்ளையார் - நண்பேண்டா !

என் மகன் பள்ளியில் பாடுவதற்காக, எழுதியது !




தொந்தி வெச்ச பிள்ளையாரு !
என்னுடைய நண்பேன்டா !
வந்து என்ன பாக்குறநீ
வந்த வழி திரும்புடா !
மந்திரத்த சொல்லிகிட்டு
மோதகத்தை படையல் செஞ்சேன் !
மோதகத்தை ஏத்துகிட்டு
சாதகமா நடந்துக்குவார் !

(தொந்தி வெச்ச)

அப்பா செல்லம் யாருடா?
சிங்கக் குட்டி நானடா !
எல்லாருக்கும் செல்லம் இங்கே
பிள்ளையாரு தானடா !

தப்பு ஏதும் செஞ்சுபுட்டா..
தோப்புக் கர்ணம் போட்டுபுட்டா
தப்பை எல்லாம் மறந்திடுவார்
தங்க பிள்ளையாருடா !

(தொந்தி வெச்ச)


Thursday, August 14, 2014

மங்கையராய் பிறப்பதற்கே...!





கருவிலே 'பெண்சிசு' என்றால்..
   கலைத்திட வழிகள் செயவார் !
உருவுடன் வெளியே வந்தால்...
   குப்பையில் தூக்கியே எறிவார் !

குப்பையில் கண்டெடுத் தவனும்
   கண்களை சிதைத்தே விடுவான் !
தப்பவே முடியா இடத்தில்...
   பிச்சையும் இரங்கிட வைப்பான் !

கன்னியாய் வளர்ந்தே நின்றால்
   காளையர் சேட்டைகள் செய்வார் !
பெண்மையை ருசித்துப் பார்த்து
    காட்சியில் மறைந்தே போவார்!

முதுமையில் வீட்டில் தனியே
   முழுமையாய் ஓய்வும் கொண்டால்
முதுகிலே கத்தி நுழைத்து...
    உயிரையும் மாய்த்தே போவார் !

'பெண்' என உலகில் பிறந்தால்
     ஒவ்வொரு பருவம் தனிலும்
எண்ணிலா துயரம் வாட்டும் !
      என்செயும் பெண்கள் கூட்டம்?

பெண்களே இல்லை என்றால்..
   பூமியே உய்வதும் இல்லை...
எண்ணியே பார்த்திட வேண்டும்..
  ஏளனம் செய்திடும் கூட்டம் !

ரூபனின் தீபாவளிக் கவிதைப் போட்டி (2014) க்காக எழுதப்பட்டது ...
============

"பெண் சுதந்திரம்" பற்றிய பேச்சுக்கள் இன்னும் பேச்சளவிலேயே உள்ளதும், அது ஒரு சபதமாக மூச்சினிலே கலக்காத நிலை தொடர்வதும், மிகவும் வேதனைக்குரியது. பெண்களுக்கெதிரான வன்முறைகள் தினசரி செய்தியானது வருந்தத்தக்கது. பெண்கள் இனத்தயே அழித்து விடவேண்டும் என்ற நோக்கோடு வன்முறையாளர்கள் செயல்பட்டுவருவது போல் தோன்றுகிறது. இது கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டியது.

Sunday, August 3, 2014

பிற தளங்களில்...

இணையத்தில் மற்ற தளங்களில் இடம் பெற்ற எனது படைப்புகள் :  

வல்லமை
அதீதம்


SoundCloud.com

"சந்தித்ததும் சிந்தித்ததும்" என்ற பெயரில் பதிவெழுதும் நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் பதிவில், என்னுடைய கவிதை:


போட்டியில் வென்றதற்கான அறிவிப்புகள் :

Saturday, August 2, 2014

பூவை

படத்துக்குப் பாட்டு -  ரூபனின் தீபாவளிக் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது ...

கூந்தலில் சூடும் பூவை
   கூடையில் ஏந்திக் கொண்டு
பாந்தமாய் வளைந்தே நிற்கும்
   பூவைப்போல் தோன்றும் பூவை...
பார்வைதான் யாரைத் தேடும் ?
    பொங்குதே விழியில் நாணம் !
கோர்வையாய் வார்த்தைத் துளிகள்
    கவிதையின் சரமெனத் துள்ளும் !

"பூ"வெனக் கூவியே சென்ற‌
   வீதியின் கடைசி வீட்டில்...
"ஆ" வென சத்தம் எழுப்பி
   இவளது கவனம் ஈர்த்த...
மேலுடை அணியாக் காளை
   முகமது நினைவில் தோன்ற...
கால்களும் கோலம் போடும் !
    கனவிலே நெஞ்சம் ஓடும் !

"நேற்றுபோல் இன்றும் அவனே
   நேரிலே தோன்றிடு வானோ?
காற்றிலே பறந்தென் நெஞ்சம்
   காதலை மொழிபெயர்த் திடுமோ?"
என்றெலாம் எண்ணியே இவளும்
   இன்றைய ஊர்வலம் துவங்க...
"நன்றெலாம் நடக்கும்" எனநாம்
   நல்லதோர் வாழ்த்தும் சொல்வோம் !

 

Friday, August 1, 2014

தித்திக்குதே !

இனிப்புதான் மிகவும் பிடிக்கும்
   என்றதை உண்டே வந்தால்...
இனிப்பதே உன்னைப் பிடிக்கும்
    சர்க்கரை நோயின் மூலம் !

ஜாங்கிரி, கேசரி என்று
    இனிப்புகள் பெயரைக் கேட்டால்
பொங்கிடும் நீரூற் றெனவே
     ஊறிடும் உள்நாக் கினிலே !

ஒன்றுதான் இரண்டுதா னென்று
    ஒவ்வொரு முறையும் இங்கே...
உண்டுநீ வந்தால் போதும்...
  'சர்'ரென சர்க்கரை ஏறும் !

யாருமே பார்க்கா நேரம்
   வாயினில் தினிக்கத் தோணும் !
கூறுமே உண்மையை இங்கே
   நேர்ந்திடும் உடல்மாற் றங்கள் !

வீட்டிலே உள்ளவர் எல்லாம்
    வாய்த்ததோர் வாய்ப்பு என்றே
சூட்டிலே பொசுக்கிய சொல்லால்
     'கரிசனம்' காட்டியே செல்வார் !

நாவினை அடக்கியே நாளும்
   வித்தையை அறிந்திட வேண்டும் !
தீவினை சர்க்கரை நோயாய்
   மேவிடும் முன்பே நாமும் !

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates