.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Tuesday, February 25, 2014

என்ன நடக்குது?!

சின்ன பல்புகூட சில நேரமே எரியும் ஊரில்...
வண்ண விளக்குகள் வீதி வழி எங்கும் !

செல்ல வழிகூட சொல்லிஉதவாதோர் ஊரில்...
சென்ற இடமெல்லாம் வாழ்த்தும் வணக்கமும் !

நல்லக் குடிநீரைத் நாடினாலும் கிடைக்காத ஊரில்...
வெல்ல இனிப்போடு தண்ணீர்த்  தரும்பந்தல் !

கெட்ட மணம்வீசும் குட்டிச் சந்துகள் கூடயிங்கு..
சுத்தம் செய்யப்பட்டு ப்ளீச்சிங் பவுடருடன் !

பெற்ற பிள்ளைகூட உதறிய பெரு மூதோட்டிக்கு...
உற்ற துணை யாரோ வெள்ளைஉடையான் !

என்ன நடக்குதென விழிரெண்டும் விழிக்கும்போது
சின்னம் காட்டினானே...! தேருதல் நேரமென்று !

( இந்த சிந்தனைகளைத் தொடர்வதுபோல் எழுதி, இன்னும் மூன்று பத்திகளை இணையுங்களேன் பின்னூட்டத்தில் ! சேர்ந்து ரசிக்கலாம் ! )

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates