.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Tuesday, June 28, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - காட்சி - 2

காட்சி - 2

இடம்: ஒரு பூங்கா
பாத்திரங்கள்: முத்து, நண்பன் சிவா
-------------
முத்து: டேய் சிவா ! என்னடா இது ! மாட்ச் - பார்க்கப் போகாம இங்க வந்து உட்கார்ந்திருக்க?
சிவா: சும்மாதான்டா ! வீட்டுல கரண்ட் இல்ல...! அதான் இங்க வந்து காத்து வாங்கலாமுன்னு...இங்க பாரு...இந்த பார்க்க-ல இருக்கிற பூவெல்லாம் என்ன வாசனை பாரு...!

(முத்து அருகில் வருகிறான்)

சிவா: டேய் ! என்னடா இது ! திடும்-ன்னு ஒரே நாத்தமாயிருக்கு !

முத்து: ம்...எனக்கு ஒண்ணும் தெரியல...!

சிவா: ம்...எனக்குத் தெரிஞ்சுபோச்சு ! வெற்றிகரமா 4-வது நாளா இன்னிக்கும் நீ குளிக்கல...! அதானே ?

முத்து: போடா டேய் !

சிவா : ஏன்டா முத்து ! இப்படி புழுக்கத்துல உன்னால எப்படிடா குளிக்காம இருக்க முடியுது?

முத்து: சிவா ! நான் உயிரோடு இருக்கனும்னா, என்னால குளிக்க முடியாது...

சிவா: குளிச்சா செத்து போயிடுவ-ன்னு உனக்கு யார்-டா சொன்னா?

முத்து: சிவா...தேவையில்லாம ஏதேதோ கேட்காத...நான் கிளம்பறேன்...!

சிவா: உன்னோட இந்த பழக்கத்தினாலேயே உன்னோட நண்பர்கள் எல்லாம் உன்னை விட்டு போகப்போறாங்க பாரு !

முத்து: அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லடா ! முதல்ல நான் உயிரோட இருக்கணும் ...! அத விடு...நான் இப்போ மேட்சுக்குப் போறேன்...நீ வர்றியா இல்லையா?

சிவா: இல்லடா..! நான் வரலே ! வீட்டுக்குப் போகணும் !

முத்து: சரிடா ! நான் கிளம்பறேன்...பாக்கலாம்...

(செல்கிறான்)

சிவா: (மனசுக்குள்) ச்சே ! இவனத் திருத்தவே முடியாது போலிருக்கு ! ஆனாலும் நல்ல பையன்...இவன பத்தி நம்ம அப்பாகிட்ட பேசிப்பார்ப்போம் ...!

Sunday, June 26, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம்

காட்சி - 1
இடம்: முத்துவின் வீடு
------------------------------------------

முத்துவின் தந்தை: டேய்  அருணாசலம் ! அருணாசலம், என்னடா இது? காலையிலேயே எழுந்துகிட்டு, ட்ரெஸ் பண்ணிகிட்ட கிளம்பிட்டே !

முத்து: அப்பா ! உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? என் பேரு அருணாசலம் கிடையாது...முத்து...

தந்தை: டேய் கண்ணா ! அருணாசலம்-ங்கிறது உங்க தாத்தா பேருடா...!

முத்து: இருந்தா என்ன? முத்து கூடத்தான் என்னோட இன்னொரு தாத்தா பேரு...அப்புறமென்ன...அருணாசலம், விருதாசலம்-ன்னு பேரு...

தந்தை: சரி...சரி...மூணு நாளா முழுகாம இருந்தியே ! இன்னிக்கு முழ்கிட்டியா? இல்ல முழுகாமலேயே ட்ரெஸ் பண்ணிகிட்டு கிளம்பிட்டியா?

முத்து: இதோ பாருங்க அப்பா ! நான் உயிரோட இருக்கணும்னா என்னை இனிமே குளிக்க சொல்லதீங்க...

தந்தை: அய்யய்யோ ! முத்து என்னடா சொல்ற?

முத்து: அப்பா ! எல்லாம் நேரம் வரும்போது விவரமா சொல்றேன்...

தந்தை: என்னவோடா முத்து ! நீ நல்லாயிருந்தா சரி...ம்...உனக்கு இன்னும் மெச்சூரிட்டியே வரல...ஏதோ 21 வயசுக்கு மேல ஆனா தானா பொறுப்பு வராதா-ன்னு பார்க்கிறேன்...படிப்பு கூட ஓபன் யுனிவர்சிட்டியில படிச்சுக்கலாம்...

முத்து: ஓபன் யுனிவர்சிட்டி-ன்னா என்னப்பா?

தந்தை: திறந்த நிலைப் பல்கலைக் கழகம்...

முத்து: போப்பா ! நான் அங்கெல்லாம் படிக்க மாட்டேன்...மழை பேஞ்சா...நனைஞ்சிடுவேன் ...திறந்தே இருக்கில்ல...!

தந்தை: ஐயோ...கர்மம்டா ! உன்னை பெத்ததுக்கு...

முத்து: சரி..சரி..நான் வர்ரேன்-பா...!

தந்தை: டேய் ! முத்து..இருடா...எங்கடா போற?

முத்து: மேட்ச்-பார்க்க போறேன்-பா...

தந்தை: என்னது மேட்ச்சா...டேய் ! அதெல்லாம் நாங்க பார்த்து அந்த அந்த நேரத்தில செய்வோம்டா..

முத்து: அப்பா ! நான் கிரிக்கெட் மேட்ச் சொன்னேன்பா... நான் இப்ப சொல்லட்டுமா...உனக்கு இன்னும் மெச்சூரிட்டியே வரல...!

தந்தை: டேய் ! என்ன சொன்ன? நில்லுடா...(முத்து ஓடிவிடுகிறான்)...(தனக்குள்) ம்...எல்லாம் என் நேரம்...

(ரேடியோவில்..."நிலையத்தில் தற்போது நேரம் சரியாக ஆறு மணி ஐம்பது நிமிடம்...")

தந்தை: ச்சே ! இது வேற...முதல்ல இந்த ரேடியோவை நிறுத்துவோம்...!

(தொடரும்....)

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates