.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Tuesday, November 26, 2013

கனியிருப்ப காய் கவராய் காற்றே !



தென்றலாய் வீசியே எங்கள்
   தேகங்கள் சிலிர்த்திடச் செய்வாய் !
என்றுமே இதமே தருவாய்
   தென்திசை காற்றே நீதான் !

மழைமிகு காலந் தன்னில்
   மனிதர்மேல் சீற்றம் கொண்டு
பிழைபல நட ந்தது போல‌
   புயலெனப் பாய்ந்தே வருவாய் !

புயலெனச் சீறும் போது
  பெரியதோர் சேதம் செய்வாய் !
வயல்வெளி, சாலை, மரங்கள்
   அனைத்தையும் அழித்தே செல்வாய்!

கீற்றிலே வீட்டை வேய்ந்து
   குடித்தனம் செய்வோர் தன்னை
சீற்றத்தில் சூறையும் யாடி
  வீதியில் நின்றிடச் செய்வாய்!

மண்சுவர் வீடுகள் இடித்து
   மனிதர்கள் உயிரைக் குடிப்பாய் !
கண்கவர் காட்சிகள் எல்லாம்
   கணத்திலே சிதைத்தே செல்வாய்!

வான்புகழ் வள்ளுவன் சொன்னான்
   வாய்ருசி கனிகள் இருக்க‌
ஏன்அந்த காய்கள் என்று.....
   நீயதை கேளாய் காற்றே !

மெல்லிய தென்றலாய் வீசு !
   வல்லிய புயலாய் வேண்டாம் !
சொல்லிய வார்த்தை கேட்டு
   செல்லமாய்த் தீண்டிடு காற்றே !

Saturday, November 16, 2013

சச்சினுக்கு சலாம் போடு !

சச்சினுக்கு சலாம் போடு !
   சச்சினுக்கு சலாம் போடு !
மெச்சியவன் புகழைப் பாடு !
   மேளதாளம் போட்டு ஆடு !

பந்துவீசும் வீரர்க் கெல்லாம்
   பட படப்பைத் தந்தவன் !
வந்து பார்க்கும் ரசிகருக்கு
   விருந்து படைத்துத் தந்தவன் !

பரம சிவன் நடனமதை
   பார்த்தது போல் பரவசம் !
திறமை யான டெண்டுல்கரின்
   ஆட்டம் கண்டு களிக்கையில் !

உச்சிவரை உயர்ந் திருக்கும்
   இமய மலை சிகரமும்
சச்சினவன் சாத னைகள்
  நிமிர்ந்து பார்க்க வேண்டுமே !

களம் இறங்கும் போதுதன்
  நூறு சதம் தந்தவன் !
இளம் தலை முறைக்கெல்லாம்
  இறைவ னாகத் திகழ்பவன் !

சாத னையின் மனித உரு
   'சச்சின்' என்று சொல்லலாம் !
வேத னையாய் இருக்கிறதே
   விடை பிரியும் போதுதான் !

நூறு நூறு நொறுக்கியவன் !
   நாட்டின் பெயர் ஏற்றியவன் !
நூறு நூறு ஆண்டுவாழ‌
   நெஞ்சம் வாழ்த்திச் சொல்கிறேன் !

Friday, November 15, 2013

நன்றி !

தீபாவளிக் கவிதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கீழ்காணும் என் கவிதைக்கு வாழ்த்துக்கள் தந்தோர்க்கு நன்றி சொல்ல நான்கு வரிகள் !


வெற்றி வாகைத் தந்தோர்க்கும்
போற்றி வாழ்த்து தந்தோர்க்கும்
நன்றி சொல்லிக் கொள்கிறேன் !
ஒன்றல்ல, இரண்டல்ல, ஓராயிரம் !

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates