.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, September 29, 2013

ஒளி காட்டும் வழி !


தீபங்கள் அணிசேர்க்கும் தீபாவளிப் பண்டிகை !
    தந்திடுமே நெஞ்சினிலே தெம்போடு நம்பிக்கை !
பாபங்கள், பிணி நீக்கும் நீராடும் நதிகங்கை !
   வாழ்த்துக்கள் பறிமாறி சேர்ந்திடும்ஓர்ஆயிரங்கை !


ஒளிர்கின்ற தீபங்கள் காண்பிக்கும் வழிஎன்ன?
    ஜொலிக்கின்ற புத்தாடை சொல்கின்ற குறிஎன்ன?
மிளிர்கின்ற மத்தாப்பு மொழிகின்ற மொழிஎன்ன?
    இனிக்கின்ற தித்திப்பு விளிக்கும் சங் கதிஎன்ன?



வருங்காலம் ஒளிமயந்தான் நமக்கிங்கு என்கிறது !
    மனஅழுக்கு ஆடையினைக் களைந்திடவும் சொல்கிறது !
ஒருபோதும் விலகாத இன்முகந்தான் பார்க்கிறது !
   இன்சொல்லே எப்போதும் சொல்லென்று கேட்கிறது !


ஒளிகாட்டும் வழிதன்னை ஒருசேரக் கண்டிடுவோம் !
    ஒற்றுமையின் வலிமையினால் தடையெதையும் வென்றிடுவோம் !
வழிகாட்டும் மூத்தவராய் நல்வழியில் சென்றிடுவோம் !
    வருங்கால சந்ததியின் உதாரணம் ஆகிடுவோம் !

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates