.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, July 25, 2008

சாய‌னாபுர‌ம் அய்ய‌னார் மீது...

ஆவ லோடு நாம வாழும் ஊரு _ இதைக்
காவல் செஞ்சுக் காப்ப துவும் யாரு?
எல்லை யிலே நின்னு ரிப்பார் பாரு ! _ நம்ம‌
தொல்லை தீர்த்துக் காக்கும் அய்ய னாரு!

முன்ன வங்க சாமி சாத்த னாரு _ வீரச்
சின்ன முங்க நம்ம வேம்ப னாரு!
பூர ணாவும் புஷ் கலாவும் கூட _ சேர்ந்து
ஆத ரவா காத்து இருப் பாரு!

மீசை வெச்சு வீரம் காட்டும் சாமி ! _ நம்மேல்
ஆசை வெச்சு பாசம் காட்டும் சாமி !
தீட்டி வெச்ச வீசும் அரி வாளு! _ அதைத்
தூக்கி வெச்சு காவல் செய்யு வாரு !

மடை திறந்த தண்ணி யதைப் போல _ சீறித்
'தடதட' ன்னு பாயும் குதிரை மேல...
சுடலை மாடன் கருப் பண்ணனும் கூட _ வந்து
கவலை யெல்லாம் தீர்த்திடுவார் பாரு!

ப‌டைய‌ல் வெச்சு கும்பி டுவோம் வாங்க‌ ! _ வெற்றி
அடைய னும்னு வேண்டிக் க‌லாம் வாங்க‌!
க‌ன்னுக் குட்டிய‌க் காக்கும் ப‌சு போல‌ _ ந‌மைக்
க‌ண் ம‌ணியாய் காத்தி ருக்கும் சாமி!

Monday, July 14, 2008

திரைப் பட பாடல் சூழலில் என் கற்பனை வரிகள் _ 1

பாடல் சூழல்: ஊர்ப் பெரியவரைப் போற்றிப் பாடுவது

பூ மாலை கட்டி போடுங்கடி ! _ புதுப்
பாட்டெடுத்து பாடுங்கடி..!

நம்ம ஊரு காவல்சாமி !
பல்லாண்டு வாழ வாழ்த்துங்கடி!

அம்மன் அருள் வேண்டுங்கடி
அய்யா நலம் போற்றுங்கடி !!

(பூமாலை)

நல்ல உள்ளம் உள்ளவரு!
நாடு போற்றும் நல்லவரு

தப்புகளை தட்டி கேட்கும்
தங்கமான உத்தமரு!

வெல்லம் போல இனியவரு
வெற்றி நாட்டும் புதியவரு...

வள்ளலென வாரித் தரும்
எங்க ஊரு கர்ணரு! _ அவர்
பூமுகத்தில் பூத்திருக்கும்
புன்னகையை பாருங்கடி ! _ பல

கண்ணுபடும் ஓடிவ ந்து
திருஷ்டி சுத்தி போடுங்கடி...!

(பூமாலை)

சிங்க வீரம் கொண்டவரு..!
நம்ம ஊரு ஆண்டவரு!

சங்கத் தமிழ் பேசுகின்ற‌
எங்குலத்து நாயகரு!

மங்காதப் புகழ் உள்ளவரு!
மாணிக்க ந்தான் நல்லவரு!

பொங்கி வரும் வெள்ளம் போல‌
கொள்கை திடம் உள்ளவரு!

சொன்னபடி நட ந்திடுவார் ...
குறைவு இல்லா கண்ணியம்டி!

இ ந்த வீரர் இங்குவர
செய்திருக்கோம் புண்ணியம்டி!

(பூமாலை)

Friday, July 11, 2008

குத்தால‌ம் அருள்மிகு ப‌ரிபூர‌ண‌ வினாய‌க‌ர் அட்ட‌க‌ம்

ராக‌ம்: பூர்விக‌ல்யாணி

பூதலத்து நாயகனே நான்கு
வேதப் பொருள் ஆனவனே _ உன்
அட்ட‌க‌ கீத‌ம் இசைக்கின்றேன் _ இனிய‌
நாத‌மாய் வ‌ருவாய் நீயே


1)

ராக‌ம்: க‌ல்யாணி

நிறைவாழ்வு த‌ந்த‌ருளும்
நில‌ வேந்த‌ன் க‌ண‌ப‌தியே

ம‌றைபொருளாய் ஆகி நிற்கும்
ப‌ரிபூர்ண நாய‌க‌னே

குறைககூறும் குர‌ல்கேட்டு
க‌ற்ப‌க‌மாய்த் த‌ருப‌வ‌னே

சிறைப‌ட்டேன் உன்ன‌ழ‌கில்
சித‌ம்ப‌ர‌த்தான் திரும‌க‌னே

2)

ராக‌ம்: ஹ‌ம்ச‌த்வ‌னி

திரும‌க‌னே திருக்கும‌ர‌ன்
திரும‌ண‌த்தை முடித்த‌வ‌னே

வ‌ருப‌வனே வ‌ர‌ம‌ருள‌
விறைந்திட்டே வாக‌ன‌மேல்

திருமுருக‌ன் மூத்தவ‌னே
திருத்துருத்தி ஆண்ட‌வ‌னே

பேருவ‌கை அடைந்திட்டேன்
பெற்ற‌தெல்லாம் உன்ன‌ருளே

3)

ராக‌ம்: ர‌ஞ்ச‌னி

அருள் பொழியும் மேக‌ம் நீ
அழ‌கு ப‌ரி பூர‌ணனே

பொருள் பெருக்கும் கார‌ணனே
போற்றுகிறேன் காத்திடுவாய்

இருள் நீக்கி ஒளித‌ந்து
இட‌ர்விலக்கும் திருவிளக்கே

பேருள்ள‌ம் கொண்ட‌வ‌னே
பார்காக்கும் வ‌ல்ல‌வ‌னே

4)
ராக‌ம்: கானட‌

வ‌ல்ல‌வ‌னே உன்நாம‌
வ‌ண்மைத‌ன்னை உண‌ர்ந்திட்ட‌

நல்ல‌வ‌ர்க்கே அருள்புரிவாய்
ந‌ன்மைக‌ளைச் செய்திடுவாய்

அல்ல‌ல்க‌ளை அழித்திடுவாய்
அக‌முவ‌ந்து பாடுகிறோம்

வ‌ள்ள‌லேஉன் திருவ‌டிக‌ள்
ந‌ம்பினார்க்குத் துணையாகும்

5)

ராக‌ம்: ஆரபி

துணையாகும் நின் நினைவு
தெளிந்திட்டால் அச்ச‌மில்லை

இணையில்லை வேரொருவ‌ர்
இங்குன‌க்கு முன்நிற்க

வினைத்தீர்க்கும் நாய‌க‌னே
வேழ‌முக‌ வ‌ந்திடுவாய்

உனைக் க‌ண்டேன் எனைம‌ற‌ந்தேன்
உண்மைப‌ரி பூர‌ண‌னே

6)

ராக‌ம்: மோக‌ன‌ம்

ப‌ரிபூர்ண‌ நாய‌க‌னே
ப‌ண்பு நல‌ன் த‌ருப‌வ‌னே

க‌ரிமுக‌த்து பால‌க‌னே
க‌டைக் க‌ண்ணால் த‌ருப‌வ‌னே

ஹ‌ரிஹ‌ர‌னின் மூத்த‌வ‌னே
அவ‌னிக்கே முத‌ல‌வ‌னே

நெறித‌வ‌றா உன்ன‌ருளே
நிக‌ழ்த்திடுமே அற்புத‌ங்க‌ள்

7)

ராக‌ம்: ம‌லைய‌மாருத‌ம்

அற்புத‌ங்க‌ள் ஆற்றிடுமே
அருள்புரியும் உன்க‌ர‌ங்க‌ள்

பொற்பாதம் பிடித்திட்டேன்
ப‌ரிபூர்ண‌ நாய‌க‌னே

ந‌ற்க‌தியை த‌ந்திடுவாய்
ந‌ல‌ம‌ருள‌ வ‌ந்திடுவாய்

ஏற்ற‌முற‌ச் செய்திடுவாய்
எங்க‌ள் ம‌ணிபால‌க‌னே

8)

ராக‌ம்: ம‌த்ய‌மாவ‌தி

பாலகனே கணபதியே
பார் போற்றும் பண்டிதனே

நீலகண்டன் மைந்தனே நீ
நிற்கின்றாய் எம்நெஞ்சில்

வேல‌வ‌னின் சோதர‌னே
வேண்டுவ‌ர‌ம் த‌ந்திடுவாய்

ஆல‌ம‌ர‌த் தெய்வ‌மேநீ
அடியார்க்கு அமிழ்த‌ம்தான்

Tuesday, July 8, 2008

என் மனைவிக்காக...

Tune: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன் நான்
இப்ப‌டி என் ம‌ன‌ம் துடித்த‌தில்லை
அத்த‌னை பெண்க‌ளில் தேவ‌தையாக‌
நீ ம‌ட்டும் நீ ம‌ட்டும் தெரிந்த‌து ஏன்?

ர‌ம்யா ஓ ர‌ம்யா நீஎன‌க்கே பிற‌ந்த‌வ‌ளா?!
பெண்ணில் ப‌ல‌ பெண்ணில்நீயே சிற‌ந்த‌வ‌ளா?!
தன்ன‌ன் நான‌ன‌ தன்ன‌ன் நான‌ன‌
தன்ன‌ன் நான‌ன‌ தன்ன‌ன் நான‌ன‌






(எத்தனை பெண்களைக்)


கருங்காந்த விழிகள்.... அது சொல்லும் மொழிகள்
அதுபோல என் கவியும் இனிக்காது

வருங்காலமெல்லாம் வசந்தம் நம் வாழ்வில்
புது இன்பம் தந்தது யாரு நீதானே

பூவைத் தீண்டும் காற்றாய் வந்தேன்
பூவை உன்னை கண்டு கொண்டேன்

பெரும் புயலாய் வந்தேன்...
தென்ற‌ல் ஆகினேன்..

தன்ன‌ன் நான‌ன‌ தன்ன‌ன் நான‌ன‌
தன்ன‌ன் நான‌ன‌ தன்ன‌ன் நான‌ன‌
(எத்தனை பெண்களைக்)

வெயில் காலம் வந்தால் நிழ‌ல் தேடி போவேன்
இனி உந்த‌ன் குழல் தேடி நான் சேர்வேன்
ம‌ழைக் காலம் வந்தால் குடை தேடிப் போவேன்
இனி உந்த‌ன் உடையைத் தேடி நான் சேர்வேன்

மாறிப் போகும் என் வானிலை
மாற்ற‌ம் த‌ந்தாள் என் தேவ‌தை
என் வாழ்வெனும் வானிலே நீ வெண்ணிலா

தன்ன‌ன் நான‌ன‌ தன்ன‌ன் நான‌ன‌
தன்ன‌ன் நான‌ன‌ தன்ன‌ன் நான‌ன‌
(எத்தனை பெண்களைக்)

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates