.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, March 28, 2014

சாயி அருணோதயம் !


"சர்வம் சாயி மயம் " என்ற பெயரில் வெளிவந்துள்ள‌ CD-யில் இடம்பெற்ற எனது பாடல் ஒன்றுக்கான வரிகள் !



அருணோதயம் ஆகின்றது !
ஆலய வாசல்கள் திறக்கின்றது !

கருணாகரன் சாயி தரிசனம் காண...
கருணாகரன் சாயி தரிசனம் காண...

கூட்டம் அலையாய் வருகின்றது !
கூட்டம் அலையாய் வருகின்றது !

ஓம் சாயி ராம் ! ஸ்ரீ சாயி ராம் !
ஓம் சாயி ராம் ! ஜெய் சாயி ராம் !

(அருணோதயம் ஆகின்றது)

வேத மந்திரமும் ஓதிடவே !
நாத சுரம் இசை பாடிடவே !

பறவைகள் ஆனந்த ஆர்ப்பரிக்க !
மடந்தையர் பூஜைக்குப் பூப்பரிக்க !

திருவிழா கோலமே சன்னதியில் !
திருவிழா கோலமே சன்னதியில் !

குருசாயி நாதனின் சன்னதியில் !

ஓம் சாயி ராம் ! ஸ்ரீ சாயி ராம் !
ஓம் சாயி ராம் ! ஜெய் சாயி ராம் !

(அருணோதயம் ஆகின்றது)

அபிஷேகம் நிறைவாய் நடந்திடவே !
அலங்காரம் அழகினைச் சேர்த்திடவே !

ஆரத்தி பார்த்திட ஆனந்தமே ! - மன
பாரத்தை இறக்கிய நிம்மதியே !

நாளொன்று பிறந்தது அவனருளால் !
நாளொன்று பிறந்தது அவனருளால் ! - எந்த‌

நாளுமே சென்றிடும் அவன்நினைவால் !

ஓம் சாயி ராம் ! ஸ்ரீ சாயி ராம் !
ஓம் சாயி ராம் ! ஜெய் சாயி ராம் !

(அருணோதயம் ஆகின்றது)

Wednesday, March 19, 2014

பூமியை வாழவிடு



பூமியிலே அழகுஎன்ன பூவா காற்றா? - சீறிப்
   பாய்ந்து வரும் கடலலையா? நீரின் ஊற்றா?
சாமியவன் படைப்பினிலே எல்லாம் அழகு ! - இன்னும்
   சொல்லப் போனால் கிரகங்களிலே பூமியே அழகு !

அழகுமிகும் பூமியிலே உயர்ந்தவன் மனிதா !  - அந்த‌
   அழகையெல்லாம் சிதைத்திடுதல் சரியா? முறையா?
நிழலைத்தரும் மரத்தையெல்லாம் வெட்டிச் சாய்த்தாய் !
    நிலத்தையெல்லாம் மனைகளாக்கி பசுமை மாய்த்தாய் !

அறிவியலின் போர்வையிலே அழிவுகள் செய்தாய் ! - அந்த‌
   இயற்கையோடு இயைந்த வாழ்வின் அருமை மறந்தாய் !
கரிப்புகையால் காற்றதனை காயம் செய்தாய் ! - அந்தக்
    காயம்பட்டக் காற்றினையே மூச்சாய் உண்டாய் !

உன்குலத்து சந்ததிகள் வாழ்ந்திட வேணும் ! - மற்ற‌
   உயிர்களுமே உரிமையுடன் வாழ்ந்திட வேணும் !
பண்ணெடுத்து வேண்டுகிறேன் கேட்டிட வேணும் ! - இந்த‌
   பூமியினை வாழவிடு எல்லோரும் வாழ !

Tuesday, March 11, 2014

ஷீரடி சாய் பாபா பாடல்கள் அடங்கிய எனது CD



(For CD Related communications, please email to: psdprasad.music@gmail.com)

அன்புடையீர் !

ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர விழைகிறேன். ஷீரடி சாய் பாபா மீது நான் எழுதிய தமிழ் பாடல்கள் அடங்கிய CD, தற்போது வெளியாகியுள்ளது. 'ரமணா விஷன்' என்னும் நிறுவனத்தின் பெயரில் இது வெளியாகியுள்ளது. இதில், நான் 5 பாடல்களை எழுதியுள்ளேன். அதில் 2 பாடல்களை நானே பாடியும் உள்ளேன். என்னுடைய ஒரு பாடலை திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடி பெருமை சேர்த்துள்ளார்கள் ! 

இந்த CD, தங்கள் அருகிலுள்ள பாபா ஆலயங்களில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 75 ரூபாய் மதிப்புள்ள இந்த CD -யைப் பெற விரும்புவோர், தங்கள் ஊர் பெயருடன் விருப்பத்தைத் தெரியப் படுத்துங்கள். CD யை உங்களிடம் சேர்ப்பதற்கான முறையை தெரியப்படுத்துகிறேன்.

Friday, March 7, 2014

பெண்மையைப் போற்றுவோம் !


பெண்ணும் ஆணும் சரிசமமா? - இந்தப்
    பேச்சினை நானும் ஏற்கனுமா?
எண்ணியேப் பார்க்கணும் ஒருநிமிடம் ! - பெண்
   சிறப்புகள் ஆணை விடஅதிகம்!

பூவும் தேனும் சரிசமமா? - ஒரு
   'பூ' தான் தேனைத் தருகிறது !
பூவும் பெண்ணும் நிகர்தானே ! - நாம்
   பெருவதைத் தருவது அவள்தானே !

பெற்ற தாயும் அவள்தானே ! - காதல்
   உற்றுக் கரைபவள் அவள்தானே !
சுற்றம் சேர்ப்பவள் அவள்தானே ! - நல்
   மாற்றம் செய்பவள் அவள்தானே !

வீட்டின் குலமகள் அவள்தானே ! - பல‌
   பாட்டின் ஊக்கமும் அவள்தானே!
நாட்டில் இன்றவள் நிலையென்ன? - இதை
   நினைத்திட நல்லதோர் கணமென்ன?

மான்களை வீழ்த்தும் புலியினம்போல் - பெண்
   மாண்பினை அறியா சிறுகுணத்தோர் !
'ஆண்கள்' நாமெனத் திமிரினிலே ! - பலக்
   கொடுமைகள் செய்குவார் ஊரினிலே !


பொறுத்தது போதும் இனியில்லை ! - இந்த‌
   சிறுத்துவ செயலுக்கு முடிவெடுப்போம் !
திருத்தமாய் சட்டம் செய்திடுவோம் ! - அதைத்
   தீவிர மாயஅமல் செய்திடுவோம் !

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates