.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, June 21, 2014

ஷீரடி சாய் பாபா பாடல் - கேட்க கேட்க மெய் சிலிர்க்கும்

"சர்வம் சாயி மயம்" என்ற பெயரில் வெளியான  CD-ல் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை நானே எழுதி, மெட்டமைத்து, பாடியிருக்கிறேன்...கேட்டு மகிழுங்கள் !

https://soundcloud.com/psdp1/ketka-ketka-sarvam-sai-mayam

பாடல் வரிகள் கீழே:
-----------------------------

கேட்க கேட்க மெய் சிலிர்க்கும் !
கேட்டவுடன் உயிர் துளிர்க்கும் !
சாயி லீலா ! குரு சாயி லீலா !

ஒன்றா ரெண்டா பாட்டில் சொல்ல !
ஓராயிரம் லீலை !

ஒன்றோ ரெண்டோ சொன்னால்கூட‌
நெஞ்சில் பூத்திடும் சோலை !

(கேட்க கேட்க )

ஆழ்கடலில் கப்பலிலே மூழ்கியவன் !
ஆழ்ந்ததொரு பக்தியிலே பாபா என்றான் !
எங்கோ அந்த பாபா மீது நீரிறைத்தது !
இங்கே அந்த பக்தனவன் உயிர் பிழைத்தது !

(கேட்க கேட்க )

கைத் தவறி கைக்குழந்தை தீயில் விழ !
கைக் கொடுப்பாய் என்று அந்தத் தாயும் அழ !
எங்கோ அந்த பாபா கைகள் தீயில் வெந்தது !
இங்கே அந்த பிள்ளை நன்றாய் மீண்டு வந்தது !

(கேட்க கேட்க )

மண்விளக்கை ஏற்றிவைக்க எண்ணையில்லை !
என்றுசொன்ன வணிகர்சொல்லில் உண்மையில்லை !
தண்ணீரிலே பாபா ஒரு தீபம் ஏற்றினார் !
கண்ணீரிலே அவர் உருக மாற்றிக்காட்டினார் !

(கேட்க கேட்க )


Saturday, June 14, 2014

சிறுவரைப் பணி அமர்த்தல் தகுமோ?

பச்சிலம் பாலகனை, பள்ளிக்கு அனுப்பாமல்
எச்சில் இலை எடுக்க வைத்திடுதல் அதுதகுமோ?

நன்றாய்உருவாகி நாளைக்கு நாடாளும்
பொன்னான கைகளிலே கல்சுமத்தல் அதுதகுமோ?

பாடி,விளையாடிப் பயிலுகின்ற பருவத்தில்
பீடி, தீப்பெட்டி தொடச்செய்தல் அதுதகுமோ?

கல்வியது அவன் உரிமை, கற்பித்தல் நம் கடமை !
செல்வமெலாம் சேர்ந்த்து வரும் கல்வியதன் பின்னாலே !

சிறுவர் பணி அமர்த்தும் சிறுசெயலை நிறுத்திடுவோம் !
வருமோர் காலமதில் அவர்வெல்ல உதவிடுவோம் !

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates