.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, August 23, 2013

வாலி !

வாளி வாளியாய் வார்த்தை கொட்டியது - நீ
பாடல் எழுதும் போது !
பாட்டு எழுதுதல் உனக்கு தண்ணீர் பட்ட பாடாச்சே !

கவியரசு காலத்திலேயே
புதுமுரசு கொட்டியவன் நீ !

அந்தக் கண்ண தாசனுக்கே
சின்ன பயம் தந்தவன் நீ !

பத்தாறு ஆண்டுதாண்டி
முத்தான பாடற் தந்தாய் !

எத்தனை நாள் ஆயிடினும்
முணுமுணுக்கும்  பாடற் தந்தாய் !

வாலிபக் கவிஞரென
மூத்தோரும் வாழ்த்திட்டார் ! - உன்

சீரிய நடைமுறையை
முன்மாதிரியாய் பார்த்திட்டார்!


சிந்தனைக்கும் ரசனைக்கும்
உன்பாடற் பெரும் விருந்து !

வந்தனைகள் செய்கின்றோம்
எம்மோடு மனமுவந்து !

Tuesday, August 20, 2013

தலைவா !

 நீ வரவேண்டும் ...உனைக் காண வேண்டும்...
என்பதுதான் பலபேரின் ஆசையிங்கு !

நீ வரும் நாளில் மாலையோடு
சிறப்பான பூசையுமுண்டு !

நீ வந்து கையசைத்தால்
மிரளுவார் பலரும்...!

நீ வரமாட்டாய் என்றுசொல்லி
மிரட்டுவார் சிலரும் !

நீ வரும் நேரம் யாரறிவார் ?
அறிந்தவ‌ ரில்லை !

உன் சக்தியினை சரிவரவே
புரிந்தவ‌ ரில்லை !

நீ வரும்போது புவிஅதிரும் !
விலகிடும் புதிரும் !

இறைவா ! என் தலைவா !
 உனைக் காண வேண்டும் !

வா ! வா ! நீ வா வா !  இங்கு
வணங்கினோம் மீண்டும் !

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates