.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Wednesday, September 24, 2014

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி?!

கருங்கூந்தல் மேகக் காரி !
   கடல்நீரை உறிஞ்ச உறிஞ்ச...
பெரும்பங்குத் தலைமேல் ஏற...
   உலர்த்திடத்  தலைவிரித்தாளே !

தரையெலாம் சிதறியே விழுமாம்...
  தூரலாய் நீர்த்துளிக் கோர்வை !
"மழைத்துளி" என்றோர் பெயரில்...
    மண்ணிலே வருணன் பார்வை !

பூமியின் அடியில் தோன்றி...
   பூமிவாழ் உயிர்களுக் கெல்லாம்...
சாமிபோல் உதவிய நீர்க்கு...
   பூமிதான் பிறந்த வீ டாகும் !

விடுப்பிலே தாயின் வீடு
    திரும்பிடும் புதுப் பெண்போல‌
துடிப்பிலே 'சோ'-வெனக் கூவி
    'திபுதிபு' என மண்சேரும் !

நீரெனப் புவியில் ஓடி
   நலமுடன் வாழும் போதும்
ஊரெலாம் குளிர்ந்திட மழையாய்
    தரையிலே வீழ்ந்திடும் போதும்

புவியெலாம் வாழ்த்திடும் என்றும் !
   புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் !
கவிஞர்கள் பாடிடும் மழைதான் !
   சொல்லாமல் சொல்வது என்ன?

உலகெலாம் வாழ்த்திடும் வண்ணம்
   நடந்திடும் உன்னத‌ குணத்தாள்...
'சலசல' மழைத்துளி சொல்லும்
   சங்கதி புரிந்தே வாழ்வோம் !

Wednesday, September 17, 2014

பகிரப்பட்ட விருது !

திரு.யாழ்பாவாணன் அவர்கள், தனக்கு கிடைத்த விருதினை, பெருந்தன்மையுடன்  10 பதிவர்களுடன் பகிர்ந்துள்ளார் http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_16.html. அந்த பத்து பேரில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் தெரிவிக்கிறேன்.

அவரது தமிழ்ப் பணி மேலும் சிறக்க வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.  அவர் பகிர்ந்த விருது இதோ...







நன்றிகள் பலவுடன்
பிரசாத்

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates