கருங்கூந்தல் மேகக் காரி !
கடல்நீரை உறிஞ்ச உறிஞ்ச...
பெரும்பங்குத் தலைமேல் ஏற...
உலர்த்திடத் தலைவிரித்தாளே !
தரையெலாம் சிதறியே விழுமாம்...
தூரலாய் நீர்த்துளிக் கோர்வை !
"மழைத்துளி" என்றோர் பெயரில்...
மண்ணிலே வருணன் பார்வை !
பூமியின் அடியில் தோன்றி...
பூமிவாழ் உயிர்களுக் கெல்லாம்...
சாமிபோல் உதவிய நீர்க்கு...
பூமிதான் பிறந்த வீ டாகும் !
விடுப்பிலே தாயின் வீடு
திரும்பிடும் புதுப் பெண்போல
துடிப்பிலே 'சோ'-வெனக் கூவி
'திபுதிபு' என மண்சேரும் !
நீரெனப் புவியில் ஓடி
நலமுடன் வாழும் போதும்
ஊரெலாம் குளிர்ந்திட மழையாய்
தரையிலே வீழ்ந்திடும் போதும்
புவியெலாம் வாழ்த்திடும் என்றும் !
புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் !
கவிஞர்கள் பாடிடும் மழைதான் !
சொல்லாமல் சொல்வது என்ன?
உலகெலாம் வாழ்த்திடும் வண்ணம்
நடந்திடும் உன்னத குணத்தாள்...
'சலசல' மழைத்துளி சொல்லும்
சங்கதி புரிந்தே வாழ்வோம் !
கடல்நீரை உறிஞ்ச உறிஞ்ச...
பெரும்பங்குத் தலைமேல் ஏற...
உலர்த்திடத் தலைவிரித்தாளே !
தரையெலாம் சிதறியே விழுமாம்...
தூரலாய் நீர்த்துளிக் கோர்வை !
"மழைத்துளி" என்றோர் பெயரில்...
மண்ணிலே வருணன் பார்வை !
பூமியின் அடியில் தோன்றி...
பூமிவாழ் உயிர்களுக் கெல்லாம்...
சாமிபோல் உதவிய நீர்க்கு...
பூமிதான் பிறந்த வீ டாகும் !
விடுப்பிலே தாயின் வீடு
திரும்பிடும் புதுப் பெண்போல
துடிப்பிலே 'சோ'-வெனக் கூவி
'திபுதிபு' என மண்சேரும் !
நீரெனப் புவியில் ஓடி
நலமுடன் வாழும் போதும்
ஊரெலாம் குளிர்ந்திட மழையாய்
தரையிலே வீழ்ந்திடும் போதும்
புவியெலாம் வாழ்த்திடும் என்றும் !
புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் !
கவிஞர்கள் பாடிடும் மழைதான் !
சொல்லாமல் சொல்வது என்ன?
உலகெலாம் வாழ்த்திடும் வண்ணம்
நடந்திடும் உன்னத குணத்தாள்...
'சலசல' மழைத்துளி சொல்லும்
சங்கதி புரிந்தே வாழ்வோம் !