.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Wednesday, September 2, 2015

இயற்கை அதிசயம் !

இயறகையின் அதிசயங்கள்தான் எத்தனை?.............




சுற்றிடும் பூமியில் வாழ்ந்தும் - நாமும்
சுற்றியே விழுவதுமில்லை !
வெற்றிடம் நிறந்த காற்றை - கண்ணால்
உற்றினும் காணுவதில்லை !

சூரியன் கதிரின் வெம்மை - வாங்கிடும்
வெண்ணிலா சுடுவதுமில்லை !
ஆழியின் கரையைத் தொட்டு - ஆடிடும்
அலைகளும் ஓயுவதில்லை !

மின்னலின் கீற்று பாய்ந்தும் - வானில்
விரிசல்கள் விழுவதுஇல்லை !
பின்னலாய் வருமழைத் துளிகள் - மண்ணை
ஒருசேர நனைப்பதுமில்லை !

மழையிலே நனைகிற போதும் -பூவின்
வண்ணமும் நீங்குவதில்லை !
இதையெலாம் செய்திடும் மாயன் - அந்த
இறைவனின் நிகரதுஇல்லை !

6 comments:

  1. அருமையான கவிதை இறைவனின் நிகருக்கு ஏதுமில்லை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி !

      Delete
  2. வணக்கம்
    அண்ணா

    கற்பனை நன்று.. வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -நன்றி-

    ReplyDelete
  3. நன்றி நண்பரே ! தொடர்ந்து வரவும்

    ReplyDelete
  4. அருமையான பதிவு

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates