.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, October 16, 2015

ஜோக்ஸ் - பாகம் - 11


​"ஹோட்டல்ல அந்த சர்வரை ஜீனியஸ்-ன்னு சொன்னிங்களே! அப்படி அவரு என்ன செஞ்சாரு?"

"அட நீங்க வேற...காபி-க்கு "ஜீனி" - "யெஸ்"-ன்னு சொன்னேன்..."

"!!!"




பேரன்: தாத்தா..! கொள்ளு தாத்தா மாதிரி "கொள்ளு அப்பா" -வும் இருக்குதானே !
தாத்தா: இல்லப்பா...அப்பா...தாத்தா..கொள்ளு தாத்தா..கொள்ளு அப்பா கிடையாது...
பேரன்: குட்டி குதிரை பசிச்சா அதோட அப்பாகிட்ட என்ன கேட்கும்..."பசிக்குது...கொள்ளு அப்பா"-ன்னு தானே !


-------------------------------------------------------------------------
"மலையடிவாரத்துல உட்கார்ந்து காலையிலேர்ந்து மலைக்கு மேல போற பாதையையே பாத்துகிட்டு இருக்கியே ! ஏன்டா?"
"எங்க அப்பாதான் முன் ஏறுகிற வழியப் பாரு-ன்னு சொன்னாரு !"

"!!!"


Saturday, October 10, 2015

மின் - தமிழ் இலக்கியப் போட்டிகளில் (2015), வெற்றி பெற்ற எனது கட்டுரை



கோலாகலமாகக் கொண்டாடப் படும்  புதுக்கோட்டை " (2015) பதிவர் திருவிழா"வையொட்டி  நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள எனது கட்டுரை !

கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

பதிவர் திருவிழாவின் அதிகாரபூர்வ வலைப்பூவில், போட்டி முடிவுகள்,,
இங்கே சொடுக்கவும்.

போட்டி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வலைப்பூவில்...போட்டி முடிவுகள்

Friday, October 2, 2015

திரும்பி வா ! பாதை மாறி...



கணிணியிலே தமிழ்மொழியின் கொடியதனை ஏற்று !
   கதை, கவிதை  காவியங்கள் செம்மொழியில் ஆக்கு !
மணித்துளியில் பணிமுடிக்கும் எளிமையினை இங்கு...
   மனிதஇனம் முழுவதற்கும் செந்தமிழில் வழங்கு !

மாசுபடும் சூழலினால் மண்ணுக்கிலை நன்மை !
    மாசுபட்ட மனம்கழுவி உணர்ந்திடுவாய் உண்மை !
ஏசிடுமே நாளையநாள் சந்ததிகள் உன்னை !
   சுத்தமான சூழலில்லை வாழ்வதற்கு என்றே !

பெண்களெலாம் நாட்டின்இரு கண்களென ஆவார்!
    பெருந்துயரை நீகொடுக்க மனமுடைந்து நோவார் !
கண்கள்அதை குத்திவிடும் கொடுஞ்செயலை செய்து...
    குருடன்என வழியறியா அலைந்திடுதல் ஏனோ?

இப்படித்தான் வாழ்திடணும் இவ்வுலகில் என்று...
   முன்னவர்கள் சொல்லிவைத்தார் நன்முறைகள் அன்று !
எப்படியும் வாழ்ந்திடுவேன் வாழ்வெனது என்று...
   கண்டவழி செல்லுகிறாய் பண்பாடதனை மறந்து...!

விழித்தெழுவாய் ! இலக்கடையும் பாதையது தூரம்!
    சுழலுகின்ற காலம்அது காட்டுதிங்கே வேகம் !
வழித்தவறி இலக்குஇன்றி செல்லுவதும் எங்கே?
     சிந்தனைக்கு உணவளித்து திரும்பிடணும் இங்கே !

உறுதிமொழி:

1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் "மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015" (வகை - 5 மரபுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்

2.  இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates