.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, September 27, 2015

பண்பாடு - வேறல்ல...ஆணி வேர் !

'பழையதோர் பண்பாட்டாலே
பயனென்ன?' என்றே கேட்பார்...
பழஞ்சோற்றில் தானே நல்ல
பலந்தரும் ஆற்றல் அதிகம் !

உயரமாய் மரம் வளர்ந்தாலும்
அடியிலே ஆணிவேர் வேண்டும் !
உச்சியைத் தொடும் வாழ்வெனினும்
பண்பாடு அடித்தள மாகும் !

மனிதனின் தோலைப் போர்த்தி
மிருகமாய் உலவிடு வோர்க்கு
மனிதத்தின் மகத்துவம் சொல்லும்
முன்னோர் செய்தபண் பாடு !

இதற்கு இம்முறை நன்றே
எளியதாய் வகுத்தார் அன்றே !
நல்வழி காட்டிடும் போது
நள்ளிருள் பாதை எதற்காம்?

மாறிடும் காலங்கள் மாறும் !
நேரிய வழிகளைக் கூறும்...
சீரிய நம்பண் பாடென்றும்...
மறந்திடல் சரியா சொல்வாய் !


உறுதிமொழி:

1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் "மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015" (வகை - 4 புதுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்

2.  இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்

3 comments:

  1. Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா ! தொடர்ந்து வரவும் !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates