.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Monday, September 21, 2015

துவளாதே ! துள்ளி எழு !





​மாற்றம் வரவேண்டும் எனநினைக்கும் மனமிருக்கா தோழா? - நாட்டின்
   மாண்பை மேம்படுத்தும் கனவிருக்கா  கண்களிலே தோழா?
சீற்றம் கொண்டுபின் அடங்கியேநீ ஒதுங்குவதும் முறையா? - ஏதும்
   சீர்செய் முடியாது எனமுடித்து ஒடுங்குவதும் சரியா?

வலிமை சேர்உடலும் பணபலமும் படைத்ததொரு கூட்டம் ! -  கொடும்
   வன்மை முறைசென்று விதவிதமாய் ஆடுதிங்கே ஆட்டம் !
தனிமை தனில்புலம்பி துடிதுடிக்கும் தோழர்களின் நாட்டம்  - ஒன்றாய்
    திரண்டே தோள்கொடுத்தால் எதிரியெலாம் எடுத்திடுவார் ஓட்டம் !

கனிம வளம்தன்னை களவாடிக் காசாக்கும் கும்பல் ! - அதைக்
    கண்டே அஞ்சாமல் போராடும் சகாயம் அவர்கள் !
தனியாய் நம்முன்னே ஒளிர்கின்ற சுடரெனவேத் தெரிவார் ! - அவர்
   வழியில் தடைதாண்டி துவளாமல் நீச்சலிட நீவா !


பாயும் நதியெல்லாம் வளைந்தோட அஞ்சுவதும் இல்லை ! - கடை
   சேரும் கடல்தூரம் அறிந்ததவும் சோர்வதுவும் இல்லை !
ஓயும் இப்பொழுது என அலைகள் நினைப்பதுவும் இல்லை ! - தான்
    ஓங்கி வீழ்ந்தாலும் மீண்டுமெழ மறப்பதுவும் இல்லை !


"போகும் தூரமது வெகுதொலைவு" சிந்தையிலே வைத்து...-  அதற்குள்
   'போதும்' எனஎண்ணி நில்லாமல் இலக்கினையே நோக்கு!
'ஆகும் இதுநம்மால்' நம்பிக்கை ஒளிதன்னை ஏற்று ! - எதிர்
   காணும் தடைகளைநீ வெற்றியதன் படிகளென மாற்று !


வெற்றிக் கனியதுவும் கைசேரும் வரையிலும்நீ ஓடு ! - அந்த
   வானம் அதைத்தாண்டி  வரைந்திடுவாய் புதுஎல்லைக் கோடு !
சுற்றும் எதிர்மறையை நம்பிக்கை அதனாலே வீழ்த்து ! - இந்த
   உலகேப் பாடிடுமே உனைஏற்றி அருந்தமிழில் வாழ்த்து !


உறுதிமொழி:

1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் "மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015" (வகை - 5 மரபுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்

2.  இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்

15 comments:

  1. வணக்கம்
    அண்ணா.

    கவிதையின் திறன் கண்டு மனம் மகிழ்ந்தேன் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.அண்ணா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வாழ்துகள்1 மிகநல்ல கவிதை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா ! தொடர்ந்து வரவும் !

      Delete
  3. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா ! தொடர்ந்து வரவும் !

      Delete
  4. அருமை! வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தளிர் சுரேஷ் அவர்களே!

      Delete
  5. வெற்றிக் கனியதுவும் கைசேரும் .... வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. பாவலரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

      Delete
  6. வணக்கம் !
    நம்பிக்கை ஊட்டும் பாவரிகள் கண்டு மகிழ்ந்தேன்
    வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ! தொடர்ந்து வரவும் !

      Delete
  7. அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  8. அருமை அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates