.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, March 7, 2014

பெண்மையைப் போற்றுவோம் !


பெண்ணும் ஆணும் சரிசமமா? - இந்தப்
    பேச்சினை நானும் ஏற்கனுமா?
எண்ணியேப் பார்க்கணும் ஒருநிமிடம் ! - பெண்
   சிறப்புகள் ஆணை விடஅதிகம்!

பூவும் தேனும் சரிசமமா? - ஒரு
   'பூ' தான் தேனைத் தருகிறது !
பூவும் பெண்ணும் நிகர்தானே ! - நாம்
   பெருவதைத் தருவது அவள்தானே !

பெற்ற தாயும் அவள்தானே ! - காதல்
   உற்றுக் கரைபவள் அவள்தானே !
சுற்றம் சேர்ப்பவள் அவள்தானே ! - நல்
   மாற்றம் செய்பவள் அவள்தானே !

வீட்டின் குலமகள் அவள்தானே ! - பல‌
   பாட்டின் ஊக்கமும் அவள்தானே!
நாட்டில் இன்றவள் நிலையென்ன? - இதை
   நினைத்திட நல்லதோர் கணமென்ன?

மான்களை வீழ்த்தும் புலியினம்போல் - பெண்
   மாண்பினை அறியா சிறுகுணத்தோர் !
'ஆண்கள்' நாமெனத் திமிரினிலே ! - பலக்
   கொடுமைகள் செய்குவார் ஊரினிலே !


பொறுத்தது போதும் இனியில்லை ! - இந்த‌
   சிறுத்துவ செயலுக்கு முடிவெடுப்போம் !
திருத்தமாய் சட்டம் செய்திடுவோம் ! - அதைத்
   தீவிர மாயஅமல் செய்திடுவோம் !

4 comments:

  1. வரிகளால் சிறப்பித்து விட்டீர்கள்... பாராட்டுக்கள்...

    சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா !

      Delete
  2. அருமையான கருத்துடன் கூடிய
    மகளிர் தின சிறப்புக் கவிதை
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates