பெண்ணும் ஆணும் சரிசமமா? - இந்தப்
பேச்சினை நானும் ஏற்கனுமா?
எண்ணியேப் பார்க்கணும் ஒருநிமிடம் ! - பெண்
சிறப்புகள் ஆணை விடஅதிகம்!
பூவும் தேனும் சரிசமமா? - ஒரு
'பூ' தான் தேனைத் தருகிறது !
பூவும் பெண்ணும் நிகர்தானே ! - நாம்
பெருவதைத் தருவது அவள்தானே !
பெற்ற தாயும் அவள்தானே ! - காதல்
உற்றுக் கரைபவள் அவள்தானே !
சுற்றம் சேர்ப்பவள் அவள்தானே ! - நல்
மாற்றம் செய்பவள் அவள்தானே !
வீட்டின் குலமகள் அவள்தானே ! - பல
பாட்டின் ஊக்கமும் அவள்தானே!
நாட்டில் இன்றவள் நிலையென்ன? - இதை
நினைத்திட நல்லதோர் கணமென்ன?
மான்களை வீழ்த்தும் புலியினம்போல் - பெண்
மாண்பினை அறியா சிறுகுணத்தோர் !
'ஆண்கள்' நாமெனத் திமிரினிலே ! - பலக்
கொடுமைகள் செய்குவார் ஊரினிலே !
பொறுத்தது போதும் இனியில்லை ! - இந்த
சிறுத்துவ செயலுக்கு முடிவெடுப்போம் !
திருத்தமாய் சட்டம் செய்திடுவோம் ! - அதைத்
தீவிர மாயஅமல் செய்திடுவோம் !
வரிகளால் சிறப்பித்து விட்டீர்கள்... பாராட்டுக்கள்...
ReplyDeleteசர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா !
Deleteஅருமையான கருத்துடன் கூடிய
ReplyDeleteமகளிர் தின சிறப்புக் கவிதை
மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா !
Delete