பூமியிலே அழகுஎன்ன பூவா காற்றா? - சீறிப்
பாய்ந்து வரும் கடலலையா? நீரின் ஊற்றா?
சாமியவன் படைப்பினிலே எல்லாம் அழகு ! - இன்னும்
சொல்லப் போனால் கிரகங்களிலே பூமியே அழகு !
அழகுமிகும் பூமியிலே உயர்ந்தவன் மனிதா ! - அந்த
அழகையெல்லாம் சிதைத்திடுதல் சரியா? முறையா?
நிழலைத்தரும் மரத்தையெல்லாம் வெட்டிச் சாய்த்தாய் !
நிலத்தையெல்லாம் மனைகளாக்கி பசுமை மாய்த்தாய் !
அறிவியலின் போர்வையிலே அழிவுகள் செய்தாய் ! - அந்த
இயற்கையோடு இயைந்த வாழ்வின் அருமை மறந்தாய் !
கரிப்புகையால் காற்றதனை காயம் செய்தாய் ! - அந்தக்
காயம்பட்டக் காற்றினையே மூச்சாய் உண்டாய் !
உன்குலத்து சந்ததிகள் வாழ்ந்திட வேணும் ! - மற்ற
உயிர்களுமே உரிமையுடன் வாழ்ந்திட வேணும் !
பண்ணெடுத்து வேண்டுகிறேன் கேட்டிட வேணும் ! - இந்த
பூமியினை வாழவிடு எல்லோரும் வாழ !
அருமை... உண்மை...
ReplyDeleteசிறப்பாகவும் முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி தனபாலன் சார் ! உங்கள் வருகையும் ஊக்குவிப்புகளும் எனக்குத் தொடரவேண்டும் !
Delete