"சர்வம் சாயி மயம் " என்ற பெயரில் வெளிவந்துள்ள CD-யில் இடம்பெற்ற எனது பாடல் ஒன்றுக்கான வரிகள் !
அருணோதயம் ஆகின்றது !
ஆலய வாசல்கள் திறக்கின்றது !
கருணாகரன் சாயி தரிசனம் காண...
கருணாகரன் சாயி தரிசனம் காண...
கூட்டம் அலையாய் வருகின்றது !
கூட்டம் அலையாய் வருகின்றது !
ஓம் சாயி ராம் ! ஸ்ரீ சாயி ராம் !
ஓம் சாயி ராம் ! ஜெய் சாயி ராம் !
(அருணோதயம் ஆகின்றது)
வேத மந்திரமும் ஓதிடவே !
நாத சுரம் இசை பாடிடவே !
பறவைகள் ஆனந்த ஆர்ப்பரிக்க !
மடந்தையர் பூஜைக்குப் பூப்பரிக்க !
திருவிழா கோலமே சன்னதியில் !
திருவிழா கோலமே சன்னதியில் !
குருசாயி நாதனின் சன்னதியில் !
ஓம் சாயி ராம் ! ஸ்ரீ சாயி ராம் !
ஓம் சாயி ராம் ! ஜெய் சாயி ராம் !
(அருணோதயம் ஆகின்றது)
அபிஷேகம் நிறைவாய் நடந்திடவே !
அலங்காரம் அழகினைச் சேர்த்திடவே !
ஆரத்தி பார்த்திட ஆனந்தமே ! - மன
பாரத்தை இறக்கிய நிம்மதியே !
நாளொன்று பிறந்தது அவனருளால் !
நாளொன்று பிறந்தது அவனருளால் ! - எந்த
நாளுமே சென்றிடும் அவன்நினைவால் !
ஓம் சாயி ராம் ! ஸ்ரீ சாயி ராம் !
ஓம் சாயி ராம் ! ஜெய் சாயி ராம் !
(அருணோதயம் ஆகின்றது)
மிக்க மகிழ்ச்சி தோழர்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் தங்கள் கட்டுரை ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளது. வாழ்த்துகள்.. தொடர்ந்து தங்களது சிந்தனை தமிழ்ச் சமூகத்திற்கு உதவட்டும். நன்றி..
முடிவுக்கு: http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html
Delete