.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, March 28, 2014

சாயி அருணோதயம் !


"சர்வம் சாயி மயம் " என்ற பெயரில் வெளிவந்துள்ள‌ CD-யில் இடம்பெற்ற எனது பாடல் ஒன்றுக்கான வரிகள் !



அருணோதயம் ஆகின்றது !
ஆலய வாசல்கள் திறக்கின்றது !

கருணாகரன் சாயி தரிசனம் காண...
கருணாகரன் சாயி தரிசனம் காண...

கூட்டம் அலையாய் வருகின்றது !
கூட்டம் அலையாய் வருகின்றது !

ஓம் சாயி ராம் ! ஸ்ரீ சாயி ராம் !
ஓம் சாயி ராம் ! ஜெய் சாயி ராம் !

(அருணோதயம் ஆகின்றது)

வேத மந்திரமும் ஓதிடவே !
நாத சுரம் இசை பாடிடவே !

பறவைகள் ஆனந்த ஆர்ப்பரிக்க !
மடந்தையர் பூஜைக்குப் பூப்பரிக்க !

திருவிழா கோலமே சன்னதியில் !
திருவிழா கோலமே சன்னதியில் !

குருசாயி நாதனின் சன்னதியில் !

ஓம் சாயி ராம் ! ஸ்ரீ சாயி ராம் !
ஓம் சாயி ராம் ! ஜெய் சாயி ராம் !

(அருணோதயம் ஆகின்றது)

அபிஷேகம் நிறைவாய் நடந்திடவே !
அலங்காரம் அழகினைச் சேர்த்திடவே !

ஆரத்தி பார்த்திட ஆனந்தமே ! - மன
பாரத்தை இறக்கிய நிம்மதியே !

நாளொன்று பிறந்தது அவனருளால் !
நாளொன்று பிறந்தது அவனருளால் ! - எந்த‌

நாளுமே சென்றிடும் அவன்நினைவால் !

ஓம் சாயி ராம் ! ஸ்ரீ சாயி ராம் !
ஓம் சாயி ராம் ! ஜெய் சாயி ராம் !

(அருணோதயம் ஆகின்றது)

3 comments:

  1. மிக்க மகிழ்ச்சி தோழர்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரர்
    ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் தங்கள் கட்டுரை ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளது. வாழ்த்துகள்.. தொடர்ந்து தங்களது சிந்தனை தமிழ்ச் சமூகத்திற்கு உதவட்டும். நன்றி..

    ReplyDelete
    Replies
    1. முடிவுக்கு: http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates