.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, July 25, 2008

சாய‌னாபுர‌ம் அய்ய‌னார் மீது...

ஆவ லோடு நாம வாழும் ஊரு _ இதைக்
காவல் செஞ்சுக் காப்ப துவும் யாரு?
எல்லை யிலே நின்னு ரிப்பார் பாரு ! _ நம்ம‌
தொல்லை தீர்த்துக் காக்கும் அய்ய னாரு!

முன்ன வங்க சாமி சாத்த னாரு _ வீரச்
சின்ன முங்க நம்ம வேம்ப னாரு!
பூர ணாவும் புஷ் கலாவும் கூட _ சேர்ந்து
ஆத ரவா காத்து இருப் பாரு!

மீசை வெச்சு வீரம் காட்டும் சாமி ! _ நம்மேல்
ஆசை வெச்சு பாசம் காட்டும் சாமி !
தீட்டி வெச்ச வீசும் அரி வாளு! _ அதைத்
தூக்கி வெச்சு காவல் செய்யு வாரு !

மடை திறந்த தண்ணி யதைப் போல _ சீறித்
'தடதட' ன்னு பாயும் குதிரை மேல...
சுடலை மாடன் கருப் பண்ணனும் கூட _ வந்து
கவலை யெல்லாம் தீர்த்திடுவார் பாரு!

ப‌டைய‌ல் வெச்சு கும்பி டுவோம் வாங்க‌ ! _ வெற்றி
அடைய னும்னு வேண்டிக் க‌லாம் வாங்க‌!
க‌ன்னுக் குட்டிய‌க் காக்கும் ப‌சு போல‌ _ ந‌மைக்
க‌ண் ம‌ணியாய் காத்தி ருக்கும் சாமி!

No comments:

Post a Comment

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates