.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Monday, July 14, 2008

திரைப் பட பாடல் சூழலில் என் கற்பனை வரிகள் _ 1

பாடல் சூழல்: ஊர்ப் பெரியவரைப் போற்றிப் பாடுவது

பூ மாலை கட்டி போடுங்கடி ! _ புதுப்
பாட்டெடுத்து பாடுங்கடி..!

நம்ம ஊரு காவல்சாமி !
பல்லாண்டு வாழ வாழ்த்துங்கடி!

அம்மன் அருள் வேண்டுங்கடி
அய்யா நலம் போற்றுங்கடி !!

(பூமாலை)

நல்ல உள்ளம் உள்ளவரு!
நாடு போற்றும் நல்லவரு

தப்புகளை தட்டி கேட்கும்
தங்கமான உத்தமரு!

வெல்லம் போல இனியவரு
வெற்றி நாட்டும் புதியவரு...

வள்ளலென வாரித் தரும்
எங்க ஊரு கர்ணரு! _ அவர்
பூமுகத்தில் பூத்திருக்கும்
புன்னகையை பாருங்கடி ! _ பல

கண்ணுபடும் ஓடிவ ந்து
திருஷ்டி சுத்தி போடுங்கடி...!

(பூமாலை)

சிங்க வீரம் கொண்டவரு..!
நம்ம ஊரு ஆண்டவரு!

சங்கத் தமிழ் பேசுகின்ற‌
எங்குலத்து நாயகரு!

மங்காதப் புகழ் உள்ளவரு!
மாணிக்க ந்தான் நல்லவரு!

பொங்கி வரும் வெள்ளம் போல‌
கொள்கை திடம் உள்ளவரு!

சொன்னபடி நட ந்திடுவார் ...
குறைவு இல்லா கண்ணியம்டி!

இ ந்த வீரர் இங்குவர
செய்திருக்கோம் புண்ணியம்டி!

(பூமாலை)

No comments:

Post a Comment

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates