.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, July 11, 2008

குத்தால‌ம் அருள்மிகு ப‌ரிபூர‌ண‌ வினாய‌க‌ர் அட்ட‌க‌ம்

ராக‌ம்: பூர்விக‌ல்யாணி

பூதலத்து நாயகனே நான்கு
வேதப் பொருள் ஆனவனே _ உன்
அட்ட‌க‌ கீத‌ம் இசைக்கின்றேன் _ இனிய‌
நாத‌மாய் வ‌ருவாய் நீயே


1)

ராக‌ம்: க‌ல்யாணி

நிறைவாழ்வு த‌ந்த‌ருளும்
நில‌ வேந்த‌ன் க‌ண‌ப‌தியே

ம‌றைபொருளாய் ஆகி நிற்கும்
ப‌ரிபூர்ண நாய‌க‌னே

குறைககூறும் குர‌ல்கேட்டு
க‌ற்ப‌க‌மாய்த் த‌ருப‌வ‌னே

சிறைப‌ட்டேன் உன்ன‌ழ‌கில்
சித‌ம்ப‌ர‌த்தான் திரும‌க‌னே

2)

ராக‌ம்: ஹ‌ம்ச‌த்வ‌னி

திரும‌க‌னே திருக்கும‌ர‌ன்
திரும‌ண‌த்தை முடித்த‌வ‌னே

வ‌ருப‌வனே வ‌ர‌ம‌ருள‌
விறைந்திட்டே வாக‌ன‌மேல்

திருமுருக‌ன் மூத்தவ‌னே
திருத்துருத்தி ஆண்ட‌வ‌னே

பேருவ‌கை அடைந்திட்டேன்
பெற்ற‌தெல்லாம் உன்ன‌ருளே

3)

ராக‌ம்: ர‌ஞ்ச‌னி

அருள் பொழியும் மேக‌ம் நீ
அழ‌கு ப‌ரி பூர‌ணனே

பொருள் பெருக்கும் கார‌ணனே
போற்றுகிறேன் காத்திடுவாய்

இருள் நீக்கி ஒளித‌ந்து
இட‌ர்விலக்கும் திருவிளக்கே

பேருள்ள‌ம் கொண்ட‌வ‌னே
பார்காக்கும் வ‌ல்ல‌வ‌னே

4)
ராக‌ம்: கானட‌

வ‌ல்ல‌வ‌னே உன்நாம‌
வ‌ண்மைத‌ன்னை உண‌ர்ந்திட்ட‌

நல்ல‌வ‌ர்க்கே அருள்புரிவாய்
ந‌ன்மைக‌ளைச் செய்திடுவாய்

அல்ல‌ல்க‌ளை அழித்திடுவாய்
அக‌முவ‌ந்து பாடுகிறோம்

வ‌ள்ள‌லேஉன் திருவ‌டிக‌ள்
ந‌ம்பினார்க்குத் துணையாகும்

5)

ராக‌ம்: ஆரபி

துணையாகும் நின் நினைவு
தெளிந்திட்டால் அச்ச‌மில்லை

இணையில்லை வேரொருவ‌ர்
இங்குன‌க்கு முன்நிற்க

வினைத்தீர்க்கும் நாய‌க‌னே
வேழ‌முக‌ வ‌ந்திடுவாய்

உனைக் க‌ண்டேன் எனைம‌ற‌ந்தேன்
உண்மைப‌ரி பூர‌ண‌னே

6)

ராக‌ம்: மோக‌ன‌ம்

ப‌ரிபூர்ண‌ நாய‌க‌னே
ப‌ண்பு நல‌ன் த‌ருப‌வ‌னே

க‌ரிமுக‌த்து பால‌க‌னே
க‌டைக் க‌ண்ணால் த‌ருப‌வ‌னே

ஹ‌ரிஹ‌ர‌னின் மூத்த‌வ‌னே
அவ‌னிக்கே முத‌ல‌வ‌னே

நெறித‌வ‌றா உன்ன‌ருளே
நிக‌ழ்த்திடுமே அற்புத‌ங்க‌ள்

7)

ராக‌ம்: ம‌லைய‌மாருத‌ம்

அற்புத‌ங்க‌ள் ஆற்றிடுமே
அருள்புரியும் உன்க‌ர‌ங்க‌ள்

பொற்பாதம் பிடித்திட்டேன்
ப‌ரிபூர்ண‌ நாய‌க‌னே

ந‌ற்க‌தியை த‌ந்திடுவாய்
ந‌ல‌ம‌ருள‌ வ‌ந்திடுவாய்

ஏற்ற‌முற‌ச் செய்திடுவாய்
எங்க‌ள் ம‌ணிபால‌க‌னே

8)

ராக‌ம்: ம‌த்ய‌மாவ‌தி

பாலகனே கணபதியே
பார் போற்றும் பண்டிதனே

நீலகண்டன் மைந்தனே நீ
நிற்கின்றாய் எம்நெஞ்சில்

வேல‌வ‌னின் சோதர‌னே
வேண்டுவ‌ர‌ம் த‌ந்திடுவாய்

ஆல‌ம‌ர‌த் தெய்வ‌மேநீ
அடியார்க்கு அமிழ்த‌ம்தான்

No comments:

Post a Comment

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates