.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, August 8, 2008

திரைப் பட பாடல் சூழலில் என் கற்பனை வரிகள் _ 2

பாடல் சூழல்: காதல் பிரிவில் சோகம்


அன்பே வா‍_வென்றேன் வந்தாய் _ வந்து
இன்பங்கள் நீ தந்தாய்...(அன்பே)

வேகம் உண்டானபோதே ஒரு சோகம் உண்டாச்சு கண்ணே...
சோகம் உண்டாந்தாலே இந்த நெஞ்சம் ரெண்டாச்சு பெண்ணே !

புனிதமான் நம் காதல் வேள்வியில் தொல்லை வந்தது ஏனடி?
மனித ஜாதிக்கு நமது காதலின் ஆழம் புரியல தானடி...!

முள்ளில் விழுந்தது சேலையே _ அதில்
முள்ளைப் போடுதல் லீலையே !

(அன்பே)

நிலவு வீசும் இந் நேரம்..உன் அன்பன் நெஞ்சில் ஓர் பாரம்..
உலவும் என் நெஞ்சில் என்றும்... நம் நீக்கமில்லாத பந்தம்...

உடலில் தீயைத்தான் வைக்கலாம்...உயிரில் இல்லையடி பைங்கிளி..!!
கடலில் அலைகளும் ஓய்வதில்லையே...உண்மைக் காதலும் சாய்வதில்லையே...
கால நேரங்கள் மாறலாம் _ நம்
காதல் அது போல மாறுமா?

(அன்பே)

No comments:

Post a Comment

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates