இரு தலைப்பு - ஒரு கவிதை ?!....#Bluewhale
"அருகிலே உள்ள
அண்ணாச்சி கடைசென்று
அரைகிலோ அரிசி வாங்கி வா !"
அம்மா சொன்னது
அவன் காதில் விழவில்லை !
அலைபேசியில்
அயராது ஆழ்ந்திருந்தான்...!
அரைமணி கழித்து
'என்னாச்சு? அரிசி' என்றால்..
'எப்போ சொன்ன' என்கின்றான் !
அன்னை சொல்கின்ற
சிறு வேலை செய்யாமல்
அன்றாட சோத்திற்கு
வழியேதும் செய்யாமல்...
எவனோ சொல்கின்ற
'டாஸ்க்'(TASK) எல்லாம் செய்கின்றான் !
தன்னை தன்கையால்
மாய்த்திடும் நாள் குறித்து....!
அறிவியல் முன்னேற்றம் ஆட்கொல்லியாகி உள்ளது
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள் கவிஞரே!
Deleteஅலைபேசி கொல்லும், அன்பு அதை வெல்லும். இப்போதுதான் இருவரை மீட்டிருக்கிறார்கள். இனி ஒரு விழிப்புணர்வு வரும்.
ReplyDeleteகருத்துக்கு நன்றி ஸ்ரீராம்
Deleteஇப்படியும் ஒரு மோகம்... என்ன சொல்வது!
ReplyDelete