.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Wednesday, June 24, 2015

இணையத் தமிழே இனி..!

ரூபன் - யாழ்பாவாணன் நடத்திய சித்திரை கவிதைப் போட்டிக்காக எழுதியது:

பன்மொழியின் ஊடகமாம் இணையமது ! - அதில்
    படித்திடவும், பார்த்திடவும்  விடயம்பல...!
நன்மொழியாம் செந்தமிழில் ஆக்கங்களை...- அதில்
    நாடோறும் படைத்திடுவார் கலைஞர்பல...!

ஆங்கிலமே கணிணியதன் மொழியெனவே - இங்கு
    ஆண்டாண்டாய் இருந்தநிலை மாறியதே !
பாங்குடனே செம்மொழியின் ஆர்வலர்கள்... - இங்கு
     பாடுபட்ட முயற்சியதன் திருப்பயனால் !

"யூனிகோடு" என்னும்குறி யீட்டுமுறை... - அது
   யாவருக்கும் பயன்கொடுக்கும் உள்ளீட்டுமுறை !
தேனியுடன் தேன்சுவைக்குப் போட்டியிடும்.. - மறத்
   தமிழர்மொழி இணையம்வர எளியமுறை !

செம்மொழியில் பூக்கும்வலைப் பூக்களென்ன ! - தினம்
   சேர்ந்துவரும் மின்னியலின் நூல்களென்ன...!
எம்மொழிக்கும் எங்கள்மொழி சளைத்ததி(ல்)லை ! - அட..
   எம்மொழிக்கு ஈடுஇணை ஏதுமில்லை!

இணைந்திடுவோம் இணையிலாத தமிழினமே ! - இங்கு
   இன்னும்பல சரித்திரங்கள் படைத்திடவே !
இணையத்தமிழ் இன்னும்புது வேகம்பெறும் - நம்
   சிந்தனையை உலகமெலாம் சேர்த்துவிடும் !

1 comment:

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates