.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, June 28, 2015

ஆப் பம் சுட்ட கதை!

 
"பாலா பவன் -க்கு போய் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஈவ்னிங் ஆப்பம் ஆர்டர் பண்ணி சாப்பிட்டது...இப்படி போய் முடியும்ன்னு நெனைக்கவேயில்லை !" - புலம்பினார் பரந்தாமன், தன் நண்பரிடம்...

"என்ன ஆச்சு சார் ! அதுக்கும், இப்ப நீங்க படற அவதிக்கும் என்ன சம்பந்தம்?" - கதையை 'பில்ட் அப்' செய்யும் கேள்வியைத் தொடுத்தார் நண்பர்.

"அத ஏன் கேட்கறீங்க...! ஆப்பம் சாப்பிட்டு வந்த நான் சும்மா இல்லாம...என் சம்சாரத்துக்கிட்ட கேட்டேன்...!"

"என்ன கேட்டீங்க?" - ஏதோ சுவாரஸ்யமான சம்பவம் தொடர இருக்கிறது என்பதை மோப்பம் பிடித்தார் நண்பர்.

----------------

ப்ளாஷ் பேக் (கொசுவர்த்தி காயில் சுற்றுவதாகக் கற்பனை செய்து கொள்ளவும்...)

                                     


----------

பரந்தாமன்: பாலா பவன் ஆப்பம் ரொம்ப நல்லாயிருந்தது இல்ல?

மனைவி: எனக்குகூட புடிச்சுது...ஆனா..இது என்ன பெரிய்ய விஷயம்...நான் கூட வீட்டுலயே செய்வேன்...

பரந்தாமன்: ஒருநாள் செய்யேன் பார்ப்போம்...!

(இரண்டு நாள் கழித்து)

மனைவி: ஏங்க...அமேசான் 'ஆப்' ல ஆப்ப கடாய் வாங்கலாம்ங்க...ஆபர்ல போட்டிருக்கான் !

பரந்தாமன்: இந்த ஆப் எல்லாம் எனக்குத் தெரியாது...நீயே பாத்து வாங்கு...நான் பைசா தர்ரேன்...

மனைவி: நம்ம பையன் மனோகிட்ட சொல்லி அமேசான் ஆப் ல ஆப்ப கடாய் வாங்க சொல்றேன்...

-------
கட் ...கட்...மீண்டும் லைவ்...

-------------
பரந்தாமன் தொடர்ந்தார்...

"மூணாவது நாள் ஆப்ல வாங்கின ஆப்ப கடாய் டெலிவரி ஆச்சு ! பேக்கிங்க பிரிச்சு சம்சாரம் கேட்டா...ஏங்க...இன்னிக்கு ஈவ்னிங் ஆப்பம் செய்யறேன்...சரியான்னு.... நானும் சரின்னு சொல்லிட்டு சாயங்காலம் எப்ப வரும்னு காத்துகிட்டு இருந்தேன்..சாயங்காலமாச்சு...! ஆப்ப கடாயை எடுத்து அடுப்புல வெச்சு...மாவையும் சுத்திவிட்டா...நான் அதுக்குள்ள கிச்சனுக்கு வெளியே இருந்த டைனிங் டேபிள்ல க்ளீன் பண்ணி ரெடி பண்ண ஆரம்பிச்சேன்...டேபிளுக்கு கீழே பேப்பர் குப்பை மாதிரி இருந்துது...அத எடுக்கலாமுன்னு குனிஞ்சேன்..அப்ப என் பின்பக்கம் கிச்சனைப் பாத்து இருந்தது...அதே நேரத்தில கிச்சன் லேர்ந்து ஒரு சத்தம்...ஆ...ன்னு ...நான் நிமிர்ந்து நேராக ஆகறதுக்குள்ள...என் பின் பக்கத்தில (பம்-ல) யாரோ சூடா அடி வெச்ச மாதிரி இருந்தது...நானும் ஆ..ன்னு அலறினேன்...கொஞ்சம் சுதாரிச்சுகிட்டு...'என்ன ஆச்சு?'ன்னு கேட்டேன்...என் சம்சாரம் கையை உதறிகிட்டே கிச்சன் லேர்ந்து வெளியே வந்து "என்ன ஆச்சுங்க?'ன்னு என்னைக் கேட்டா...எனக்கு ஒரே எரிச்சல்...நீ என்ன பண்ணினன்னு சொல்லு...ன்னேன்

"கடாய்-ல விட்ட மாவு ஆப்பம் ஆனதுக்கு அப்புறம்..கடாய்லேர்ந்து எடுக்க வரலை..ஆப்பம் வேற கருகிட்டே இருந்துது... ஏதோ நெனப்புல ஒரு கையால புடிச்சுகிட்டு கிண்டிபார்க்கலாம்ன்னு கடாயை கையில தூக்கிட்டேன்...பயங்கர சூடு...அப்படியே கைய உதறி...கடாயை கையிலேர்ந்து வீசி விட்டேன்...உங்க பின்னாடி பட்டுடிச்சு போல..." என்றாள் அப்பாவியாய்...

நண்பருக்கு சிரிப்பு வந்தது...சிரிப்பதா..பரந்தாமனுக்கு ஆறுதல் சொல்வதான்னு தெரியல அவருக்கு...

மனசுக்குள்ளே நெனச்சுகிட்டார்...

"ஆபர்ல  ஆப் ல வாங்கின ஆப்ப கடாய் வெச்ச ஆப்பு...'பம்' - காலி...!

நீங்க என்ன நெனக்கறீங்க? ரெண்டு வார்த்தை எழுதிட்டுப் போலாம் இல்ல?

4 comments:

  1. Replies
    1. வழக்கம் போல் பதிவு போட்ட சூட்டோடு வந்து படித்து, ரசித்து, கருத்திட்டமைக்கு நன்றி சார் !

      Delete
  2. வணக்கம்
    ஆகா..ஆகா.. அருமையாக உள்ளது கதை பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. மிக்க நன்றி ரூபன்...!

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates