.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Tuesday, June 23, 2015

எமலோகப் பதவி - நாடகம் - இறுதிக் காட்சி

 காட்சி - 1 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 2 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 3,4,5 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 6,7 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 8,9 - படிக்க இங்கே சொடுக்கவும்

முக்கிய குறிப்பு:  இந்த நாடகத்தை ஏதேனும் வியாபார நோக்கோடு பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள், என்னிடம் தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல்: psdprasad.blog@rediffmail.com



காட்சி - 10                  இடம்: எமலோகம்


சி.கு: எமதர்மராஜனே ! வணக்கம்...! நீங்கள் சொன்னபடி, பட்டியலுடன், அதை வைத்திருந்த இந்த மானுடனையும் அழைத்து வந்து விட்டேன் !

எமன்: ஹா...ஹா...! இவன் தானா அது ! அவன் கையில் என்ன ஒரு சாதனம்?

சி.கு: அது கௌண்டராம் !

தேவ்: அது கௌண்டர் இல்ல...கம்ப்யூட்டர்...நான் இதில எழுதியிருக்கிற ப்ரோக்ராம் வெச்சு என்னென்ன பாவங்கள் செஞ்சா என்னென்ன தண்டணை-ன்னு சொல்லலாம்...

எமன்: ஆஹா..! அப்படியா ! ப்ரமாதம் மானிடா ! உன் பெயர் என்ன?

தேவ்: என் பெயர் தேவதாஸ்...!


படம்: நன்றி: கூகுள்

எமன்: தேவதாஸ்...! நல்ல பெயர்..உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...! இனிமேல் நீதான் என் சித்ரகுப்தன் !

சி.கு: பிரபு ! அப்படியென்றால் என் கதி!?

எமன்: உனக்கு இந்த பதவியிலிருந்து ஓய்வு தருகிறேன் ...! நீ விரும்பினால், இங்கேயே தங்கி அமைதியாக வாழலாம் ! இல்லையென்றால், பூலோகத்தில் மானிடனாகப் பிறக்கலாம் !

சி.கு: எமதர்மனே ! இது அநியாயம்...!

எமன்: (உரக்க) சித்ரகுப்தா !

சி.கு: (திமிராக) சொல்லுங்கள்..!

எமன்: நான் உன்னை அழைக்கவில்லை...! என் புதிய சித்ரகுப்தனை அழைத்தேன்..தேவதாஸ் ! எமனையே எதிர்த்துப் பேசிய இவனுக்கு என்ன தண்டனை என்று, உன் கம்ப்யூட்டரைக் கேட்டு சொல்லு...!

தேவ்: இதோ உங்கள் ஆணை ராஜனே !....ம்...கம்ப்யூட்டர் படி, இவரை இங்கிருந்து கீழே..பூலோகத்திற்குத் தள்ளிவிடவேண்டும் !

எமன்: ஹா...ஹா ! யாரங்கே ! வாருங்கள் ! என்னிடம் திமிர் காட்டிய இவனை கீழே தள்ளுங்கள் !

சி.கு: எமதர்மனே ! கொஞ்சம் கருணை காட்ட வேண்டும்...! நான் அழைத்து வந்து மானிடனே ! இது உனக்கே தர்மமா?

எமன்: ம்...இன்னும் என்ன தாமதம்? தள்ளுங்கள் அவனை கீழே !

(சித்ரகுப்தன் கீழே தள்ளப் படுகிறான்...அலறல் சத்தம்...ஆ.....)

தேவ்: எமதர்மனே ! இந்த எமலோகப் பதவி எனக்கு கிடைத்த செய்தியை என் தந்தையிடம் சொல்லவேண்டும். சொல்லிவிட்டு வரவா?

எமன்: ஹா..ஹா...ஹா...! நீ செல்ல வேண்டிய தேவையில்லை...இதோ பார் உன் தந்தையை...! ஹா...ஹா...

தேவ்: அ...அப்பா ! இதோ பாருங்க! எனக்கு வேலை கிடைத்துவிட்டது..!

எமன்: சித்ரகுப்தா...இவர் செய்த பாவத்திற்கு என்ன தண்டனை சொல்...

தேவ்: (தயக்கத்துடன்) த..தண்டனையா? எங்க அப்பாவுக்கா ! வேண்டாம்..வேண்டாம்..!

எமன்: என்ன தயக்கம் சித்ரகுப்தா ! பாசம், பந்தம் கொண்டாட இது பூலோகம் இல்லை...உன் வேலையை ஒழுங்காகச் செய்...!

தேவ்: (சமாளிக்கும் முயற்சியில்)...எமதர்மா...கம்ப்யூட்டர் சொல்படி இவரை....வேண்டாம்...எமதர்மா...! எங்க அப்பாவ ஒண்ணும் செய்யவேண்டாம்...வேணும்னா அவருக்கு பதிலா...நான்...எண்ணெய் சட்டியில் வறுபடுகிறேன்..!

எமன்: என்ன இது சித்ரகுப்தா ! உன்னை நம்பி என் பழைய சித்ரகுப்தனையும் தள்ளிவிட்டுவிட்டேனே !...(ஏதோ சத்தம் கேட்க....) ம்...யாரங்கே?

சி.கு: எமதர்மனே ! நான் தான் முன்னாள் சித்ரகுப்தன்...! கீழே தள்ளப்பட்ட நான்...ஒரு வீட்டு மாடியில் உலர்ந்து கொண்டிருந்த படுக்கையில் விழுந்துவிட்டேன் ! அதனால் உயிர் பிழைத்தேன் ! மீண்டும் உங்களிடம் மன்னிப்புக் கேட்க வந்தேன் !

எமன்: தேவதாஸ் ! உனக்கு இன்னும் ஆயுள் முடியவில்லை ! அதனால் நீ மீண்டும் பூலோகம் சென்று வாழலாம். உன் விருப்பத்திற்கு ஏற்ற வேலை கிடைக்கும் !

தேவ்: மிக்க நன்றி ராஜனே !

எமன்: என் முன்னாள் சித்ரகுப்தா...! நீதான் இனி எந்நாளும் என் சித்ரகுப்தன் !

சி.கு: நன்றி ! எமதர்மனே !

எமன்: தேவதாஸ் ...!ம்...நீ போகலாம் !

தேவ்: நான் செல்கிறேன்...! என் அப்பா?

எமன்: அவரோட ஆயுள் முடிந்து விட்டது தேவதாஸ்...நீ மனதைத் தேற்றிக்கொண்டு பூலோகம் செல்...அந்த கம்ப்யூட்டரை இங்கேயே வைத்துவிட்டுப் போ ! எனக்கு பொழுது போகாத நேரத்தில் விளையாடுவேன் !

தேவ்: எமதர்மா ! மன்னிக்க வேண்டும்...! என் அப்பாவும் இல்லாமல், கம்ப்யூட்டரும் இல்லாமல்...பூலோகத்தில் நான் என்ன செய்வேன் ! நான் இங்கேயே இருந்து விடுகிறேனே !

எமன்: ஹா...ஹா..ஹா ! உன் இஷ்டம் தேவதாஸ்..! அப்படியே ஆகட்டும் ! இனிமேல...எனக்கு இரண்டு சித்ரகுப்தர்கள்....! ஹா...ஹா...ஹா...!



                                                         (முற்றும் )


1 comment:

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates