.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Monday, June 22, 2015

எமலோகப் பதவி - நாடகம்

காட்சி - 1 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 2 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 3,4,5 - படிக்க இங்கே சொடுக்கவும்

காட்சி - 6,7 - படிக்க இங்கே சொடுக்கவும்


காட்சி-8                      இடம்: தேவதாஸ் வீடு

அப்பா: தேவதாசு ! தேவ்...! எங்கே போனான்..? ஊர் மேயப் போய்ட்டான் போல...ம்...பொறுப்பில்லாத புள்ள...

(வாசலில் சத்தம் - டக்...டக்...)

யாரது...? யாரு...?

குரல்: கதவைத் திறவுங்கள் ஐயா !

அப்பா: அ...அ...நீயா...! அன்னிக்கு தெருவுல ஏதோ தேடிகிட்டு இருந்தாயே ! நீதானே !

சி.கு: ஆம்...நானேதான் ஐயா !

அப்பா: உள்ளே வந்து உட்காருங்க...! என் பையன் கூட உங்கள பார்க்கணும்-னு சொன்னான்...

சி.கு: ஐயா ! நான் தான் சித்ரகுப்தன்...எமலோகத்திலிருந்து வருகிறேன்...!

அப்பா: (திடுக்கிட்டு) என்ன சித்ரகுப்தனா? ஆனா...எனக்கு...இன்னும் ஆயுசு...மு...முடியலையே !

சி,கு: ஹா...ஹா...பதட்டப் படாதீர்கள்...! நான் உங்கள் ஆயுள் முடிக்க வரவில்லை. ஒரு முக்கியமான பட்டியல் தொலைந்துவிட்டது...அதைத் தேடித்தான் வந்தேன்...! அதோ...! ஒரு நவீன சாதனம் இருக்கிறதே ! அதை இயக்குவது யார்?

அப்பா: அதுதான் கம்ப்யூட்டர்....என் பையன் தான் ஆப்ரேட் பண்ணுவான்...அந்தப் பட்டியலும் அவன் கிட்டதான் இருக்கு...ஆனா..அவன ஒண்ணும் செஞ்சுடாதே !

சி.கு: ஹா...ஹா...உங்கள் மகனை நான் பார்க்கவேண்டுமே !

அப்பா: (பரபரப்புடன்) அவன் எங்கே போனான்-னு தெரியல...இதோ தேடிப் பார்க்கிறேன்...!

சி.கு: நல்லது ஐயா !

(அப்பா வெளியே வருகிறார் - தேவதாசும், பாபுவும் ஓடி வருவதைப் பார்க்கிறார்)

அப்பா: என்னாச்சுடா தேவதாசு...இப்படி மூச்சிறைக்க ஓடி வர்ற...! உன்ன யாராவது எமதூதர்கள் துரத்தறாங்களா?

தேவ்: என்னப்பா ஆச்சு...! இப்படி அபத்தமா கேட்கறீங்க?

அப்பா: சரி...வா...வா...! எமலோலத்திலேர்ந்து உன்னை பார்க்க...சித்ரகுப்தன் வந்திருக்காரு...!

தேவ்: என்னப்பா ஆச்சு உங்களுக்கு ! வந்ததிலேர்ந்து...எமன்...எமலோகம்-ன்னு பேசிகிட்டு...

அப்பா: சரி...நீ உள்ளே வா...!உனக்குப் புரியும் ...!

--------------காட்சி முடிவு-------------------


காட்சி - 9          இடம்: தேவதாஸ் (கம்ப்யூட்டர் மாமா) வீடு

(தேவதாஸ், தன் அப்பாவுடன் தனது வீட்டுக்குள் நுழைகிறான்...சித்ரகுப்தன் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருக்கிறான்)

சி.கு: வாருங்கள் அன்பரே !

தேவ்: யார்யா இது? என் வீட்டுல எனக்கு முன்னாடி வந்து உட்கார்ந்துகிட்டு, என்னையே வா-ன்னு கூப்பிடறது?

சி.கு: நான் தான் சித்ரகுப்தன்...எமலோகத்திலிருந்து வந்துள்ளேன் ! நான் எமலோகத்திலிருந்து தவற விட்ட பட்டியல்...

தேவ்: ஓ ! நீங்கதானா அது ? ! அந்த பட்டியல் என்கிட்டதான் இருக்கு...அதை நான் உங்ககிட்ட கொடுக்கணும்னா - எனக்கு ஒரு உதவி செய்யணும்..

சி.கு: என்ன அது அன்பரே?

தேவ்: ஒரு நல்ல கம்பெனியில் ஒரு நல்ல பதவியில் எனக்கு வேலை கிடைக்க வழி செய்யவேண்டும்...!

சி.கு: பட்டியலோடு, உங்களையும் அழைத்து வரவேண்டும் என்பது ராஜனின் உத்தரவு...!

தேவ்: எ....என்னது? நானும் வரணுமா?

சி.:கு: பதட்டமோ, பயமோ வேண்டாம் அன்பரே !

தேவ்: பயமா? நான்...ப...பயப்படலாம் இல்ல..

சி.கு: அப்ப வேறு என்ன? வாருங்கள் போகலாம்...!

அப்பா: டேய் ! தேவதாஸ் ! என்னை அனாதையா விட்டுட்டுப் போயிடாதடா !

தேவ்: அப்பா ! நீங்கதான எனக்கு இந்த ஜென்மத்தில வேலை கிடைக்காது-ன்னு சொன்னீங்க..எனக்கு அடுத்த ஜென்மத்திலயாவது வேலை கிடைக்கட்டும்...! சித்ரகுப்தரே ! பிடியுங்கள் பட்டியலை...புறப்படுங்கள்...! என் கம்ப்யூட்டரையும் எடுத்துக் கொள்கிறேன்....எனக்குப் பொழுது போகும்..!

அப்பா: தேவதாசு...தேவா...தே...! (மார்பை பிடித்துக் கொண்டு விழுகிறார் - தேவதாசும், சித்ரகுப்தனும், கம்ப்யூட்டருடன் புறப்பட்டுவிட்டார்கள்)

----------காட்சி முடிவு-------------------(முடிவு என்ன என்பதை அறிய நாளை வரைக் காத்திருக்கவும்....தொடரும்)

2 comments:

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates