.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, June 18, 2015

எமலோகப் பதவி - நாடகம்

(1995-ல் வெளியான 'லக்கிமேன்' என்ற தமிழ் திரைப்படத்தை மாதிரியாகக் கொண்டு, அந்த சமயத்தில் நான் எழுதிய நாடகம்:)



காட்சி - 1                            இடம்: எமலோகம்


எமன்: சித்ரகுப்தா ! என்ன இது? பூலோகத்தில் இரண்டு நாட்களாக யாருமே இறக்கவில்லையா !

சி.கு : அது வந்து....ப்ரபு....

எமன் (கோபத்தில்): ம்...! வரவர உனக்கு ஞாபகமறதி அதிகமாகிவிட்டது...! ம்...நீ என்ன செய்வாய் ! உனக்கும் வயதாகி விட்டது...நீ வேலையிலிருந்து...தானாகவே ஓய்வு பெற்றுக் கொள்...!

சி,கு (அதிர்ச்சியில்) : ப்ரபு ! என்ன சொல்லிவிட்டீர்கள் ! என்னை விட வயதில் மூத்தவரான நீங்களே இன்னும் ஓய்வு பெறவில்லை ! உங்களுக்குப் பிறகுதானே நான் ஓய்வு பெறவேண்டும் !
எமன் (கோபத்தில்): ம்...! என்ன உளறுகிறாய்?

சி.கு: எமதர்மனே ! நான் இப்படி தங்களின் உதவியாளனாய் இருந்தே ஓய்வு பெற வேண்டியது தானா? தாங்கள் ஓய்வு பெற்றால், சில காலம் நானும் எமதர்மனாகப் பதவி வகித்துவிட்டு ஓய்வு பெறுவேனே !

எமன் (கோபத்தில்): ம்...! என்ன துணிச்சல் உனக்கு? இப்படிபட்ட விபரீத ஆசையெல்லாம் உனக்கெதற்கு ? இறப்போர் பட்டியலைக் கொண்டு வா ! அதிலே உனக்கும் ஒரு தேதி குறிக்கிறேன் ! ஹா...!

சி.கு: எமதர்மனே ! என்னை மன்னித்து விடுங்கள் !

எமன் : ம்...! ஹா...ஹா...! பிழைத்துப் போ ! ஆனால், இனியும் நீ சித்ரகுப்தனாக இருக்கத் தகுதியற்றவன். நான் வேறொருவனை அந்தப் பதவிக்குப் பார்த்துக் கொள்கிறேன். அந்த 'இறப்போர் பட்டியலை' என்னிடம் ஒப்படைத்துவிட்டு நீ போய் சேர் ! ஹா..ஹா...

சி.கு: ப்ரபு...அந்த பட்டியல்....

எமன்: ம்...எங்கே அது?

சி.கு: ப்ரபு ! அந்த பட்டியல் தொலைந்து விட்டது...அதனால்தான் இரண்டு நாளாக....

எமன் (இடைமறித்து) : என்னது...? தொலைத்து விட்டாயா? சித்ரகுப்தா...என்ன காரியம் செய்தாய்?

சி.கு: மன்னிக்க வேண்டும் ப்ரபு ! அது என் கையிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டது...

எமன்: கீழே விழுந்து விட்டதா? அப்படியென்றால் அது பூலோகத்தில்தான் விழுந்திருக்கும்...புறப்படு பூலோகத்திற்கு...ம்...ஆகட்டும்...!

சி.கு: இதோ புறப்பட்டேன் ப்ரபு...! பல்லக்கில் பூலோகம் சென்று அந்த பட்டியலைத் தேடி மீட்டு வருகிறேன் !

எமன்: ம்ம்....வெற்றியுடன் வா !

------------காட்சி முடிவு----------------------------(தொடரும்...)

2 comments:

  1. எமன் கூட செல்லவில்லையா...?

    ஆவலுடன் தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து ஆதரவு தருவதற்கு நன்றி சார் !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates