.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, June 14, 2014

சிறுவரைப் பணி அமர்த்தல் தகுமோ?

பச்சிலம் பாலகனை, பள்ளிக்கு அனுப்பாமல்
எச்சில் இலை எடுக்க வைத்திடுதல் அதுதகுமோ?

நன்றாய்உருவாகி நாளைக்கு நாடாளும்
பொன்னான கைகளிலே கல்சுமத்தல் அதுதகுமோ?

பாடி,விளையாடிப் பயிலுகின்ற பருவத்தில்
பீடி, தீப்பெட்டி தொடச்செய்தல் அதுதகுமோ?

கல்வியது அவன் உரிமை, கற்பித்தல் நம் கடமை !
செல்வமெலாம் சேர்ந்த்து வரும் கல்வியதன் பின்னாலே !

சிறுவர் பணி அமர்த்தும் சிறுசெயலை நிறுத்திடுவோம் !
வருமோர் காலமதில் அவர்வெல்ல உதவிடுவோம் !

8 comments:

  1. நல்ல சிந்தனை பாராட்டுக்கள். எழுத்து பிழைகளை தவிருங்கள் ,கவிதை மிளிரும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ! கண்டிப்பாக, பிழை இன்றி எழுதுவதே லட்சியம். தங்கள் கருத்துக்குப் பின் மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன்...எழுத்துப் பிழை எதுவும் கண்ணில் சிக்கவில்லை. பிழை இடத்தை சுட்டிக் காட்டினால், திருத்தம் செய்து விடுவேன்.

      Delete
    2. பச்சிளம் (பச்சிலம்)
      நாடாளும் ( நாடாலும்) இப்படி எழுதுவது முறை, தயவு செய்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

      Delete
    3. "பச்சிளம்" என்ற வார்த்தை இணையத்தில் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காணமுடிகிறது. அதே நேரத்தில் 'பச்சிலம்' என்று தேடினாலும் பயன்பாடு இருப்பது தெரிகிறது. என்னைப் பொறுத்த வரை, இந்தப் பிரயோகத்துக்கான காரணம், 'பச்சை + இளம்" என்ற அடிப்படையில் ஆகும். இதுத் தவறெனக் கருதவில்லை. "நாடாளும்" என்ற வார்த்தை சரியானது என்பதை நிச்சயமாய் சொல்ல முடியும். "நாடு" + "ஆளும்" - "ஆளுனர்", "ஆளுமை" போன்ற வார்த்தைகளில் வருவது போல்....தங்கள் கருத்துக்கு நன்றி !

      Delete
  2. வணக்கம்
    அண்ணா.

    தாங்கள் கவிதையில் சொல்லியது உண்மைதான் இன்று சிறுவர்களின் நிலை மிக மிக மோசமாகி விட்டது. எங்கு பார்த்தாலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் . இதற்கு காரணம் பொருளாதாரப் பிரச்சினைதான்.. அருமைாக உள்ளது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன் ! ஜூன் - 12-ம் தேதியை உலகக் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாளாகக் கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற ஒரு நாளுக்கு தேவையே இல்லாத நிலை வரவேண்டும் !

      Delete
  3. முற்றுமாக இளஞ்சிறுவர் பணி ஒழிக்கப்பட வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates