பச்சிலம் பாலகனை, பள்ளிக்கு அனுப்பாமல்
எச்சில் இலை எடுக்க வைத்திடுதல் அதுதகுமோ?
நன்றாய்உருவாகி நாளைக்கு நாடாளும்
பொன்னான கைகளிலே கல்சுமத்தல் அதுதகுமோ?
பாடி,விளையாடிப் பயிலுகின்ற பருவத்தில்
பீடி, தீப்பெட்டி தொடச்செய்தல் அதுதகுமோ?
கல்வியது அவன் உரிமை, கற்பித்தல் நம் கடமை !
செல்வமெலாம் சேர்ந்த்து வரும் கல்வியதன் பின்னாலே !
சிறுவர் பணி அமர்த்தும் சிறுசெயலை நிறுத்திடுவோம் !
வருமோர் காலமதில் அவர்வெல்ல உதவிடுவோம் !
எச்சில் இலை எடுக்க வைத்திடுதல் அதுதகுமோ?
நன்றாய்உருவாகி நாளைக்கு நாடாளும்
பொன்னான கைகளிலே கல்சுமத்தல் அதுதகுமோ?
பாடி,விளையாடிப் பயிலுகின்ற பருவத்தில்
பீடி, தீப்பெட்டி தொடச்செய்தல் அதுதகுமோ?
கல்வியது அவன் உரிமை, கற்பித்தல் நம் கடமை !
செல்வமெலாம் சேர்ந்த்து வரும் கல்வியதன் பின்னாலே !
சிறுவர் பணி அமர்த்தும் சிறுசெயலை நிறுத்திடுவோம் !
வருமோர் காலமதில் அவர்வெல்ல உதவிடுவோம் !
நல்ல சிந்தனை பாராட்டுக்கள். எழுத்து பிழைகளை தவிருங்கள் ,கவிதை மிளிரும்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ! கண்டிப்பாக, பிழை இன்றி எழுதுவதே லட்சியம். தங்கள் கருத்துக்குப் பின் மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன்...எழுத்துப் பிழை எதுவும் கண்ணில் சிக்கவில்லை. பிழை இடத்தை சுட்டிக் காட்டினால், திருத்தம் செய்து விடுவேன்.
Deleteபச்சிளம் (பச்சிலம்)
Deleteநாடாளும் ( நாடாலும்) இப்படி எழுதுவது முறை, தயவு செய்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்.
"பச்சிளம்" என்ற வார்த்தை இணையத்தில் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காணமுடிகிறது. அதே நேரத்தில் 'பச்சிலம்' என்று தேடினாலும் பயன்பாடு இருப்பது தெரிகிறது. என்னைப் பொறுத்த வரை, இந்தப் பிரயோகத்துக்கான காரணம், 'பச்சை + இளம்" என்ற அடிப்படையில் ஆகும். இதுத் தவறெனக் கருதவில்லை. "நாடாளும்" என்ற வார்த்தை சரியானது என்பதை நிச்சயமாய் சொல்ல முடியும். "நாடு" + "ஆளும்" - "ஆளுனர்", "ஆளுமை" போன்ற வார்த்தைகளில் வருவது போல்....தங்கள் கருத்துக்கு நன்றி !
Deleteவணக்கம்
ReplyDeleteஅண்ணா.
தாங்கள் கவிதையில் சொல்லியது உண்மைதான் இன்று சிறுவர்களின் நிலை மிக மிக மோசமாகி விட்டது. எங்கு பார்த்தாலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் . இதற்கு காரணம் பொருளாதாரப் பிரச்சினைதான்.. அருமைாக உள்ளது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் ! ஜூன் - 12-ம் தேதியை உலகக் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாளாகக் கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற ஒரு நாளுக்கு தேவையே இல்லாத நிலை வரவேண்டும் !
Deleteமுற்றுமாக இளஞ்சிறுவர் பணி ஒழிக்கப்பட வேண்டும்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா !
Delete