.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, June 21, 2014

ஷீரடி சாய் பாபா பாடல் - கேட்க கேட்க மெய் சிலிர்க்கும்

"சர்வம் சாயி மயம்" என்ற பெயரில் வெளியான  CD-ல் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை நானே எழுதி, மெட்டமைத்து, பாடியிருக்கிறேன்...கேட்டு மகிழுங்கள் !

https://soundcloud.com/psdp1/ketka-ketka-sarvam-sai-mayam

பாடல் வரிகள் கீழே:
-----------------------------

கேட்க கேட்க மெய் சிலிர்க்கும் !
கேட்டவுடன் உயிர் துளிர்க்கும் !
சாயி லீலா ! குரு சாயி லீலா !

ஒன்றா ரெண்டா பாட்டில் சொல்ல !
ஓராயிரம் லீலை !

ஒன்றோ ரெண்டோ சொன்னால்கூட‌
நெஞ்சில் பூத்திடும் சோலை !

(கேட்க கேட்க )

ஆழ்கடலில் கப்பலிலே மூழ்கியவன் !
ஆழ்ந்ததொரு பக்தியிலே பாபா என்றான் !
எங்கோ அந்த பாபா மீது நீரிறைத்தது !
இங்கே அந்த பக்தனவன் உயிர் பிழைத்தது !

(கேட்க கேட்க )

கைத் தவறி கைக்குழந்தை தீயில் விழ !
கைக் கொடுப்பாய் என்று அந்தத் தாயும் அழ !
எங்கோ அந்த பாபா கைகள் தீயில் வெந்தது !
இங்கே அந்த பிள்ளை நன்றாய் மீண்டு வந்தது !

(கேட்க கேட்க )

மண்விளக்கை ஏற்றிவைக்க எண்ணையில்லை !
என்றுசொன்ன வணிகர்சொல்லில் உண்மையில்லை !
தண்ணீரிலே பாபா ஒரு தீபம் ஏற்றினார் !
கண்ணீரிலே அவர் உருக மாற்றிக்காட்டினார் !

(கேட்க கேட்க )


4 comments:

  1. வணக்கம்

    நல்ல முயற்சி எல்லோரும் இரசிக்கும் படி நல்ல இசையில் உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையாக, இனிமையாக உள்ளது !

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா ! தங்கள் கருத்துக்கள் மூலம் ஊக்கப்படுத்தியதற்கு நன்றி ! தொடர்ந்து வருக !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates