.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, August 14, 2008

மரம் நடுவோம்

வீட்டுக்கு ஒரு மரம் _ அது
நாட்டுக்கு நல்லறம்...

வீட்டுக்கு ஒரு மரம் _ அது
நாட்டுக்கு நல்லறம்...

மரம் நடுவோம்...மழை பெறுவோம்...
மரம் நடுவோம் இப்போதே...

இன்றே நட்டால்தான்
எதிர்காலம் அப்போதே... (வீட்டுக்கு ஒரு மரம்)

காடுஅது செழித்தால்தான்
நாடுஅது செழித்திடும்

வீடு ஒன்று மரம் ஒன்று
என்ற்கொள்கை வேண்டுமே...

ஏடெடுத்து படிக்கும்புள்ள _
இன்றே வைநீ தென்னம்புள்ள...

தேடவேண்டாம் நாளைநீயும்
செல்வம் ரொம்ப அருகிலே....
(வீட்டுக்கு ஒரு மரம்)

மாரியது பெய்தால்தான்
காரியமே நடந்திடும்!

பாரிதனை உணர்ந்திடவே
காடுபல வேண்டுமே..

பயிர்த் தொழிலே உயிர்த்தொழிலாய்
ஊரெல்லாம் ஏத்துக்கணும்...!

வயிற்றறுப் பசி இல்லயெனும்
நெலமதன்னை காத்துக்கணும்...!

(வீட்டுக்கு ஒரு மரம்)

No comments:

Post a Comment

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates