வாடா தம்பி முரளி ! - நீ
கிளப்பி டாதே புரளி !
வாடி யக்கா வசந்தி - நீ
பரப்பி டாதே வதந்தி !
சோறு தின்னா தினம் தினமும் ! -ஒரு
நோவு வந்து சேருமுன்னு...
நீரு குடிச்சா அடிக்கடி யாய் ! - உள்
நெஞ்சடைச்சு போகுமுன்னு!
ஜோரா நிக்கும் தலைவரை யும் - அவர்
காலம் ஆனார் சோகமுன்னு...
தீரா சண்டை ஹீரோவுக்கும் - அவர்
காதலிக்கும் வந்ததுன்னு...!
பூவா வித்தா அதுல கூட - பல
ப்ளாஸ்டிக் பூவு உள்ளதுன்னு...
மாவா வித்தா அதுல கூட - ஒரு
மாஞ்சா கலந்து இருக்குதுன்னு.
தாலி கயிறைக் கட்டிகிட்டா - பெரும்
தாக்கம் தரும் ஆபத்துன்னு...
காலி டப்பா கையில் வெச்சா - பணம்
காலியாகிப் போகுமுன்னு..
தோதா ஒரு திட்டம் வந்தா - அதத்
தொடர்ந்து வரும் குழப்பமுன்னு...
ஏதோ ஒண்ணு சொல்லிகிட்டு - இங்க
ஏய்க்கிறது பொழுதுபோக்கா?
வாடா தம்பி முரளி ! - நீ
கிளப்பி டாதே புரளி !
வாடி யக்கா வசந்தி - நீ
பரப்பி டாதே வதந்தி !
வாடா தம்பி முரளி ! - நீ
கிளப்பி டாதே புரளி !
வாடி யக்கா வசந்தி - நீ
பரப்பி டாதே வதந்தி !
சோறு தின்னா தினம் தினமும் ! -ஒரு
நோவு வந்து சேருமுன்னு...
நீரு குடிச்சா அடிக்கடி யாய் ! - உள்
நெஞ்சடைச்சு போகுமுன்னு!
ஜோரா நிக்கும் தலைவரை யும் - அவர்
காலம் ஆனார் சோகமுன்னு...
தீரா சண்டை ஹீரோவுக்கும் - அவர்
காதலிக்கும் வந்ததுன்னு...!
பூவா வித்தா அதுல கூட - பல
ப்ளாஸ்டிக் பூவு உள்ளதுன்னு...
மாவா வித்தா அதுல கூட - ஒரு
மாஞ்சா கலந்து இருக்குதுன்னு.
தாலி கயிறைக் கட்டிகிட்டா - பெரும்
தாக்கம் தரும் ஆபத்துன்னு...
காலி டப்பா கையில் வெச்சா - பணம்
காலியாகிப் போகுமுன்னு..
தோதா ஒரு திட்டம் வந்தா - அதத்
தொடர்ந்து வரும் குழப்பமுன்னு...
ஏதோ ஒண்ணு சொல்லிகிட்டு - இங்க
ஏய்க்கிறது பொழுதுபோக்கா?
வாடா தம்பி முரளி ! - நீ
கிளப்பி டாதே புரளி !
வாடி யக்கா வசந்தி - நீ
பரப்பி டாதே வதந்தி !
ஸூப்பர் நண்பரே டப்பாங்குத்து பாடல்போல பாடிப்பார்த்தேன் அருமையாக இருக்கிறது வாழ்த்துகள்
ReplyDeleteத.ம.பிறகு
வாங்க கில்லர்ஜி ! முதலில் வந்து பாடி ரசித்தமைக்கு நன்றி !
Deletet.m.4
Deleteபல்லவிக்கு ட்யூன் வருகிறது... வாரான் வாரான் பூச்சாண்டி போல ஒரு டியூன்!! சரணங்கள் பிடிபடவில்லை! ஆனால் பதிவை ரசித்தேன்.
ReplyDeleteதம +1
பல்லவி, சரணம் என்று பாட்டாக எழுதும் நோக்கம் இல்லை...நீங்கள் சொல்வது சரி...முதல் நான்கு வரிகள் தவிர மற்றவை சற்றே நீளம் அதிகமாய் இருக்கும்...அதனால் அதே ட்யூனில் நிற்காது...!
Deleteஆஹா அழகான பாடல் மூலம் நல்லறிவு... பாராட்டுகள் பிரசாத்.
ReplyDeleteFacebook. Watsapp எல்லாம் புரளி கிளப்புவதே சிலருக்கு வேலையாகிவிட்டது...நன்றி வெங்கட்ஜி
Deleteஏதேனும் ஒரு திரைப்படத்தில் வந்தாலும் வரும்... இப்போதே வாழ்த்துகள் சொல்லிக்கிறேன் ஜி...
ReplyDeleteஆகா..! கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் நடந்தால் சந்தோசமே..நன்றி டிடி
Deleteமிகவும் நன்கு
ReplyDeleteநன்றி கவிஞரே!
Deleteநல்ல எதுகை மோனை.வாழ்த்துக்கள்/
ReplyDelete