இறைவன் செய்தானே பூமியிலே ஒதுக்கீடு !
இதுநிலமாம், இதுமலையாம், இதுநீரின் நிலையெனவே !
அதையும் மதியாமல் நம் இஷ்டம் புவியென்று
அவிழ்த்து விட்டார்போல் அலைந்தோமே நாமெல்லாம் !
நமக்கு ஒதுக்கீடு எனஒன்று வகுத்தாலே
அடுத்த ஒருவர்க்கு அதைநாமும் அளிப்போமா?
கணக்கு எல்லார்க்கும் ஒன்றேதான் மாறிடுமா?
உனக்கு... எனக்கில்லை என்றேதான் ஆகிடுமா?
களவு செய்தோமே நீர்நிலைகள் இடமெல்லாம்...
பொறுமை அதுகாத்து இருந்தனவே நேற்றுவரை !
அளவு மீறியது போலவைகள் நினைத்தனால்...
இன்று வீடுபுகக் கூரைவரை நனைந்ததுவே !
இதையும் தாண்டியொரு பேரிடரும் வருமெனிலே
எதுவும் இல்லாமல் போகின்ற நிலைவருமே !
எதையும் அரசியலாய் ஆதாயம் தேடாமல்...
இயற்கை யோடிணைந்து வாழும்வழி அறிந்திடுவோம் !
அருமையான கவிதை...
ReplyDeleteமிக்க நன்றி டி.டி !
Deleteவணக்கம்
ReplyDeleteஅண்ணா
அற்புதமாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் !
Deleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ஐயா !
Deleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ReplyDelete