.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, December 13, 2015

இறைவனின் இட ஒதுக்கீடு !



இறைவன் செய்தானே பூமியிலே ஒதுக்கீடு !
  இதுநிலமாம், இதுமலையாம், இதுநீரின் நிலையெனவே !
அதையும் மதியாமல் நம் இஷ்டம் புவியென்று
  அவிழ்த்து விட்டார்போல் அலைந்தோமே நாமெல்லாம் !

நமக்கு ஒதுக்கீடு எனஒன்று வகுத்தாலே
  அடுத்த ஒருவர்க்கு அதைநாமும் அளிப்போமா?
கணக்கு எல்லார்க்கும் ஒன்றேதான் மாறிடுமா?
  உனக்கு... எனக்கில்லை என்றேதான் ஆகிடுமா?

களவு செய்தோமே நீர்நிலைகள் இடமெல்லாம்...
  பொறுமை அதுகாத்து இருந்தனவே நேற்றுவரை !
அளவு மீறியது போலவைகள் நினைத்தனால்...
   இன்று வீடுபுகக் கூரைவரை நனைந்ததுவே !

இதையும் தாண்டியொரு பேரிடரும் வருமெனிலே
  எதுவும் இல்லாமல் போகின்ற நிலைவருமே !

எதையும் அரசியலாய் ஆதாயம் தேடாமல்...
   இயற்கை யோடிணைந்து வாழும்வழி அறிந்திடுவோம் !

7 comments:

  1. வணக்கம்
    அண்ணா
    அற்புதமாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ஐயா !

      Delete
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates