உள்ளத்தில் ஊறிவரும் உணர்ச்சிகட்கு...
உயிரோட்டம் தருபவனே கவிஞன் !
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர்களை...
பார்வையுறச் செய்பவனே கவிஞன் !
சிந்தனையாம் பெண்ணவளைக் கைப்பிடிப்பான் !
சீறிஎழும் புரட்சிமகள் ஈன்றெடுப்பான் !
நிந்தனைக்கு ஒருநாளும் அஞ்சமாட்டான் !
நித்தநித்தம் கனவுலகில் சஞ்சரிப்பான் !
இறகடித்து இன்பமுற கற்பனையாம்
எழில்வானில் சஞ்சரித்து இறங்கிவந்து...
சிறக்குமொரு கவிப்பெண்ணை பெற்றெடுப்பான்...
சீரோடு சமுதாயம் செழிக்கவென்றே !
உயிரோட்டம் தருபவனே கவிஞன் !
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர்களை...
பார்வையுறச் செய்பவனே கவிஞன் !
சிந்தனையாம் பெண்ணவளைக் கைப்பிடிப்பான் !
சீறிஎழும் புரட்சிமகள் ஈன்றெடுப்பான் !
நிந்தனைக்கு ஒருநாளும் அஞ்சமாட்டான் !
நித்தநித்தம் கனவுலகில் சஞ்சரிப்பான் !
இறகடித்து இன்பமுற கற்பனையாம்
எழில்வானில் சஞ்சரித்து இறங்கிவந்து...
சிறக்குமொரு கவிப்பெண்ணை பெற்றெடுப்பான்...
சீரோடு சமுதாயம் செழிக்கவென்றே !
சிறந்த பாவரிகள்
ReplyDeleteதொடருங்கள்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா !
Deleteநன்றிகள் தனபாலன் சார் !
ReplyDelete