செயற்கை கோளென்ன ! சந்திரனில் காலென்ன?
சாதிக்கப் பிறந்தவனே மனிதா !
இயற்கை விதியான 'அனைவரும் சமன்' என்ற
உண்மை மறந்ததவும் ஏனோ?
அரக்கன் 'சாதி'யினை ஆளாக்கி வைத்தாயே !
அவனுன்னை ஆள்வானே இன்று !
இரக்கம் இல்லாமல் வெறியாட்டம் ஆடிஅவன்...
உந்தன் இனமழித்தல் நன்றோ?
மதத்தின் பெயர்சொல்லி மதம்கொண்ட யானைபோல்..
மூர்க்க நடமாடும் மனிதா !
சகத்தில் ஒருமதமே ! 'மானுடமே' அதன்பேராம்...
வேறு ஒன்றில்லை அறிவாய் !
இரத்தம் நிறமிங்கு ஒன்றாகும் எல்லோர்க்கும்...
ஏற்றத் தாழ்வதிலே உண்டோ?
சத்தம் போட்டிங்கு ஒன்றாகச் சொல்லிடுவோம்..
'வாழ்க மானுடமே' என்றே !
சாதிக்கப் பிறந்தவனே மனிதா !
இயற்கை விதியான 'அனைவரும் சமன்' என்ற
உண்மை மறந்ததவும் ஏனோ?
அரக்கன் 'சாதி'யினை ஆளாக்கி வைத்தாயே !
அவனுன்னை ஆள்வானே இன்று !
இரக்கம் இல்லாமல் வெறியாட்டம் ஆடிஅவன்...
உந்தன் இனமழித்தல் நன்றோ?
மதத்தின் பெயர்சொல்லி மதம்கொண்ட யானைபோல்..
மூர்க்க நடமாடும் மனிதா !
சகத்தில் ஒருமதமே ! 'மானுடமே' அதன்பேராம்...
வேறு ஒன்றில்லை அறிவாய் !
இரத்தம் நிறமிங்கு ஒன்றாகும் எல்லோர்க்கும்...
ஏற்றத் தாழ்வதிலே உண்டோ?
சத்தம் போட்டிங்கு ஒன்றாகச் சொல்லிடுவோம்..
'வாழ்க மானுடமே' என்றே !
அருமை... சிறுகதை போட்டியிலும் கலந்து கொள்ள வேண்டும்...
ReplyDeleteநன்றி ! கண்டிப்பாக...தனபாலன் சார் ! தயார் செய்து கொண்டிருக்கிறேன் சிறுகதைப் போட்டிக்கு !
Deleteவணக்கம்
ReplyDeleteஅண்ணா
இரசிக்க வைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி... தனபாலன் அண்ணா சொன்னதை செய்யுங்கள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-