துயில் நீக்கும் கோவிலிலே சுப்ரபாதம் ! - பனித்
துளிதூங்கும் இலைதாங்கும் பூந்தோட்டம் !
குயில் குரல்கள் கச்சேரி களைகட்டும் ! - சிறு
குளிர்தோன்றி சில்லெனவே மெய்சிலிர்க்கும் !
சின்ன இடை வஞ்சியரின் கைஜாலம் ! - பல
வண்ணத்திலே வாசலிலே மாக்கோலம் !
சின்ன தாக பூசணிப்பூ புன்சிரிக்கும் ! - நமை
மெள்ளதாக வீட்டுக்குள்ளே தானழைக்கும் !
மாதம் தனில் மார்கழியே மனமயக்கும் ! - புது
வசந்தம்போல் இன்பமதை தான்சேர்க்கும் !
கீதம் அதுநாதமுடன் காற்றில்வரும் !- தைப்
பண்டிகைக்குத் தந்திடுமே முன்னோட்டம் !
துளிதூங்கும் இலைதாங்கும் பூந்தோட்டம் !
குயில் குரல்கள் கச்சேரி களைகட்டும் ! - சிறு
குளிர்தோன்றி சில்லெனவே மெய்சிலிர்க்கும் !
சின்ன இடை வஞ்சியரின் கைஜாலம் ! - பல
வண்ணத்திலே வாசலிலே மாக்கோலம் !
சின்ன தாக பூசணிப்பூ புன்சிரிக்கும் ! - நமை
மெள்ளதாக வீட்டுக்குள்ளே தானழைக்கும் !
மாதம் தனில் மார்கழியே மனமயக்கும் ! - புது
வசந்தம்போல் இன்பமதை தான்சேர்க்கும் !
கீதம் அதுநாதமுடன் காற்றில்வரும் !- தைப்
பண்டிகைக்குத் தந்திடுமே முன்னோட்டம் !
ரசித்தேன்...
ReplyDeleteநன்றிகள் தனபாலன் சார் !
Delete