.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, August 14, 2014

மங்கையராய் பிறப்பதற்கே...!





கருவிலே 'பெண்சிசு' என்றால்..
   கலைத்திட வழிகள் செயவார் !
உருவுடன் வெளியே வந்தால்...
   குப்பையில் தூக்கியே எறிவார் !

குப்பையில் கண்டெடுத் தவனும்
   கண்களை சிதைத்தே விடுவான் !
தப்பவே முடியா இடத்தில்...
   பிச்சையும் இரங்கிட வைப்பான் !

கன்னியாய் வளர்ந்தே நின்றால்
   காளையர் சேட்டைகள் செய்வார் !
பெண்மையை ருசித்துப் பார்த்து
    காட்சியில் மறைந்தே போவார்!

முதுமையில் வீட்டில் தனியே
   முழுமையாய் ஓய்வும் கொண்டால்
முதுகிலே கத்தி நுழைத்து...
    உயிரையும் மாய்த்தே போவார் !

'பெண்' என உலகில் பிறந்தால்
     ஒவ்வொரு பருவம் தனிலும்
எண்ணிலா துயரம் வாட்டும் !
      என்செயும் பெண்கள் கூட்டம்?

பெண்களே இல்லை என்றால்..
   பூமியே உய்வதும் இல்லை...
எண்ணியே பார்த்திட வேண்டும்..
  ஏளனம் செய்திடும் கூட்டம் !

ரூபனின் தீபாவளிக் கவிதைப் போட்டி (2014) க்காக எழுதப்பட்டது ...
============

"பெண் சுதந்திரம்" பற்றிய பேச்சுக்கள் இன்னும் பேச்சளவிலேயே உள்ளதும், அது ஒரு சபதமாக மூச்சினிலே கலக்காத நிலை தொடர்வதும், மிகவும் வேதனைக்குரியது. பெண்களுக்கெதிரான வன்முறைகள் தினசரி செய்தியானது வருந்தத்தக்கது. பெண்கள் இனத்தயே அழித்து விடவேண்டும் என்ற நோக்கோடு வன்முறையாளர்கள் செயல்பட்டுவருவது போல் தோன்றுகிறது. இது கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டியது.

1 comment:

  1. அன்புள்ள அறிஞரே! தங்களுக்கென வலைப்பதிவர் விருது பகிரப்பட்டுள்ளது. அதனைத் தங்கள் தளத்திலும் பதிந்து உதவுமாறு விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடுக.

    சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா?
    http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_16.html

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates