#கடி ஜோக்ஸ் - பாகம் - 80
காவிரி பிரச்சனையில கருத்து சொல்லாத தலைவர் !
"காவிரி பிரச்சனையிலே நம்ம தலைவர் எதுவுமே பேசாம இருப்பது தப்பு-ன்னு சொல்றீங்களே ! எல்லாத்துக்கும் கருத்து சொல்லனும்னு அவசியம் இல்லையே !"
"அட நீங்க வேற ! காவிரி-ன்னு ஒரு பொண்ணு, நம்ம தலைவரோட முதல் தாரம் தான்-னு சொல்லி வழக்கு போட்ட விவகாரத்த பத்தி சொன்னேன் !"
"????"
விரல் போச்சே !
"நம்ம ஹோட்டல்-ல சாம்பார் செய்யற அம்மா, காய் வெட்டும்போது விரலை வெட்டிகிட்டாங்களாம் !"
"ஐயயோ ! அப்புறம்...?!"
"அப்புறம் என்ன? இன்னைக்கு லேடீஸ் ஃபிங்கர் சாம்பார்-தானாம் !"
"!!!!"
வெஜ்-ஜா நான் வெஜ்ஜா?
"என்னங்க இது ! ப்யூர்-வெஜ் ஹோட்டல்-ன்னு சொல்லி கூட்டிவந்தா, உங்களுக்கு நான்-வெஜ்-ன்னு சந்தேகமா இருக்குன்னு சொல்றீங்க? எதை வெச்சு அப்படி சொல்றீங்க?"
"பக்கத்து டேபிள்-ல ஆமை வடையும், தவள வடையும் ஆர்டர் பண்றாரே !"
"????"
ரசித்தேன் மூன்றையும்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்
Deleteஹா.. ஹா.. ஆமைவடை தவளைவடை ஸூப்பர்.
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி ஜி
Deleteகடைசி ஜோக்தான் சூப்பர்
ReplyDeleteநன்றி ராஜி
Deleteஅனைத்தும் ரசித்தேன் பாராட்டுகள்
ReplyDeleteரசித்தேன்...
ReplyDeleteவாங்க டிடி !
Delete