பெண்ணைப் பாலியலாய் வதைசெய்தார் எனும்சேதி..
படிக்கும் போதெல்லாம் மனக்குமுறல் கொள்கிறது !
என்றே திருந்திடுவார் எனும்கேள்வி எழுகிறது !
என்றும் விடையில்லை எனும்விடையே சேர்கிறது !
பொம்மைத் துப்பாக்கி 'கேப்' போட்டு சுடுவதுபோல்...
பெண்ணைப் பொருளாக்கி 'ரேப்' செய்து போகின்றார் !
தன்மை இல்லாமல் தரம் தாழ்ந்து நடக்கின்றார் !
தன்குல மானமெலாம் வானத்தில் விடுகின்றார் !
திரையில் காண்பதெலாம் செய்திடவே விழைகின்றார் !
நிழலைப் பின் தொடரும் நெறுமூடர் ஆகின்றார் !
முறையில் லாதவொரு நடத்தையினைக் கொள்கின்றார் !
மண்ணின் நெறியெல்லாம் மண்ணோடு புதைக்கின்றார் !
சட்டம் அதுசெய்வோம் பெண்கொடுமைக் கெதிராக...
சீராய் அமல்செய்வோம் அதையிங்கு நேராக..!
நித்தம் நடக்கின்ற கொடுமைகட்கு முடிவாக...
யுத்தம் அதுசெய்வோம் ஒருசேர விரைவாக...!
வணக்கம்
ReplyDeleteஎப்போதுதான் விடிவுகாலம்வரும்......நன்றாக சொல்லியுள்ளீர்கள். வாழ்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்லதொரு கவிதை....
ReplyDeleteகடுமையான சட்டங்கள் தவிர அதை சரிவர செயல்படுத்தவும் தேவை...
என்றைக்கு இக்கொடுமைகள் தீருமோ.....
அருமையாக சொன்னீர்கள்...
ReplyDeleteவளமான கவிதை பாராட்டுகள்
ReplyDelete