இனிய செங்கரும்பை
கடித்து சார் உறிஞ்சி
சக்கையை எறிந்துவிட..
ஈக்கள் மொய்த்திடுமே !
காசு லெஸ்ஸாக (cash-less?)
கரும்பே வாங்காமல்..
"E-கரும்பு" எனச்சொல்லி
படைக்கின்ற பொங்கலாச்சு !
துள்ளி வருகின்ற
ஜல்லிக்கட்டு காளையுடன்
மல்லுகட்டும் வீரர்களை..
தள்ளி நின்று பார்த்தாலும்
உள்ளம் அள்ளிப் போயிடுமே !
'மிருக வதை' என்று சொல்லி
அதற்கிங்கே ஆச்சு தடை..
மாட்டோடு மல்லுகட்டும் வீரரெல்லாம்...
கோர்ட்டோடு மல்லுகட்டும் பொங்கலாச்சு !
நெல் கலங்கள் நிரப்பி வைத்து
மகசூலை அளவுசெய்து..
உழவர் மனம் மகிழ்வோடு
ஊருக்கெலாம் படைத்திடுமே !
நீர் வரத்து நின்றதனால்
சோர்வுற்று உழவரெலாம்
சோறுடைக்க வழியின்றி
வாழ்வுடைத்த பொங்கலாச்சு !
ஆயிரம்தான் ஆயிடினும்...
மானமிகு தமிழினத்தின்
தனிப்பெருமை அதைஉணர்த்தும்
'போகி' , 'பொங்கல்' திருநாளில்
ஆயிரம் ஆயிரமாய்
வாழ்த்துக்களை சொல்லிடுவோம்...!
நாளை எனும் நாளை இங்கே
நல்லதொரு மாற்றம் தரும் !
பொங்கல் முதல் மங்கலமே
பொங்கி வரும் நம்பிடுவோம்...!
/// கோர்ட்டோடு மல்லுகட்டும் ///
ReplyDeleteவேதனை தோழர்...
நல்லதே நடக்கும் என நம்பிக்கை கொள்வோம்.
ReplyDeleteவித்தியாசமான கவிதை. எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.
ReplyDeleteகால த்தின்கோலம்
ReplyDelete