.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, August 14, 2016

நா.முத்துக்குமார் - அஞ்சலி !




விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வருவாள்
கவிதைப் பெண்ணென்று..
நிரந்தரமாய் கண் மூடி விட்டாயோ?

இனி
அவள் தரும் பாடல் வரிகளை
யார் எமக்கு படைத்துத் தருவார் ?

ஆனந்த யாழை மீட்டி, தேசிய விருதினால்
பேரானந்தம் தந்தாய் தமிழுக்கே ...!
இன்று, சோக கீதம் மீட்ட வைத்துச் சென்றதுவும் நியாயமா?

நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்...!
இளம் வயது...! எளிய பண்பு...
ஏனிந்த அவசரம்?

போகாதே ! போகாதே ! என்று சொல்கிறோம்...!


உன் பாடல் கேட்கும்போதெல்லாம்
எங்கள் வீட்டில் எல்லா நாளும் பண்டிகை போல்தான் !

பல்லாயிரம் பாடல்கள் நீ படைப்பாய் !
அதையெல்லாம் வரி வரியாய் ரசிக்க வேண்டும் என்றிருந்தோம் !

சொர்க்க லோகத்தில் பாடல் பூக்கள் தொடுப்போர் இல்லை போல...!
அதனால் தான் உன்னை அழைத்துக் கொண்டான் அந்த
க் கடவுள் !

உன் புகழ் ஓங்கிட உன் பாடல் பாடுவோம்...
இந்நாளும்...எந்நாளும்...

2 comments:

  1. நல்லதோர் இரங்கற்பா....

    அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்....

    ReplyDelete
  2. 'அழகே அழகே'

    'ஆனந்தயாழை மீட்டுகிறாய்'

    ஆகிய பாடல்களைக் கேட்கக் கேட்க

    பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள்

    நம்மோடு வாழ்வதை நாம் உணருவோமே!

    ஆதலால்,

    ஒரு பாவலன் / கவிஞன்

    சாவடைந்ததாக வரலாறு இல்லையே!

    ஆயினும்

    நாமும்

    துயர் பகிருகிறோம்!

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates