பகலிலே 'பளிச்'சென்று
பாரெல்லாம் ஒளிபரப்பும்
பகலவனே ! உன் சுடரால்
மின்னாற்றல் சேமிப்பாய் !
வைகறைப் பொழுதினிலே
மெய்நனைய நடந்தாலே..
வைட்டமின் சேர்த்திடுவாய்!
வைத்தியராய் உதவிடுவாய் !
மரங்களும் செடிகொடியும்
மகரந்த சேர்க்கையுற
வரமெனவே ஒளிதருவாய் !
மலர்,கனியும் ஆக்கிடுவாய் !
சுடர்மிகு ஒளிக்கற்றை
சூட்டோடு படர்ந்திடவே
உலர்ந்திடுமே ! நீரதனில்
நனைந்தவைகள் யாவையுமே !
நன்றிதனை நவின்றிடவே
தைத்திங்கள் நாளதனில்
அன்புடனே படைத்தோமே..
படையலினை உனக்கிங்கு !
வெம்மையின் கதிராலே
வாட்டுகிறாய் ! எமையெல்லாம் !
பொம்மையா புவியுனக்கு...
பொறுத்தருள வேண்டுகின்றேன் !
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமையான வரிகள்
ReplyDelete