.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, April 16, 2016

வேல் !

கோடை விடுமுறையின் முதல் நாள். கணேஷுக்கு வீட்டில் பொழுது போகவில்லை. மாலை 5 மணிக்கு மேல், 'பீச்'சுக்கு புறப்பட்டான். கடற்கரையில் உலவிக் கொண்டிருந்த போது, எதிரே, ஒரு குரல்..

"ஹாய் ! கணேஷ் ! "

நிமிர்ந்து பார்த்தான்.."ஹாய் ! வேலு ! எப்படிடா இருக்க? பாத்து எவ்ளோ நாளாச்சு?" - கேட்ட குரல் தன்னுடைய நண்பன் வேல்முருகனுடையது என்பதை அறிந்தான்...வேலு சற்றே குண்டாகவும்,  கருப்பாகவும் இருந்தான். 

"என்னடா இப்படி கருத்து போயிட்டே?"

"என்னடா பண்றது...! சேல்ஸ்மேன் உத்யோகம். எப்போதும் வெயில்லதான் நிக்கறேன்...!"









வெகு நாள் கழித்து சந்தித்ததனால், ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

வீடு திரும்பிய கணேஷ், தன் குறும்பு தம்பியிடம் சொன்னான்...

"டேய் ! பீச்-சுக்கு போனேன்டா...! அங்க நம்ம வேலுவ பார்த்தேன்டா..! ரொம்பக் கருப்பா ஆயிட்டான்டா...!"

தம்பி சிரித்துக் கொண்டே சொன்னான்...

"டேய் ! கடலுக்குப் போனா ப்ளூ வேல் பார்த்துட்டு வருவேன்னு நினைச்சா...நீ ப்ளாக் வேல் -ஐப் பார்த்துட்டு வந்திருக்க...!"

No comments:

Post a Comment

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates