.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Thursday, February 25, 2016

பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம் !



​ஊற்று மன்றம் நடத்திய பொங்கல் கவிதைப் போட்டி-2016-க்கு நான் எழுதிய படைப்பு...உங்கள் பார்வைக்கு....​வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களுடன்...!
----------------------


வானம்பார்த்த பூமியில நாமவாழறோம் ! - அந்த
   வருணனவன் பார்வையையே நம்பியிருக்கிறோம் !
யாகம்செஞ்சு படையல்வெச்சும் வேண்டிக்கிட்டோமே !  - பஞ்ச
   கல்யாணிக்கு கல்யாணமும் செஞ்சுவெச்சோமே!

பரவலாக பொழியுமுன்னு நினைச்சிருந்தோமே ! - மழை
    சிலமணியில் தொடர்ந்துவர தவிச்சுபுட்டோமே !
இரவலாக வாங்கியதை கொடுத்தமனுஷனே...- வந்து
   இரக்கமின்றி பிடுங்கியதைப்போல் திகைச்சுபுட்டோமே !

வெள்ளமென கரையுடைத்து ஊரில்வந்ததே... !- மழை
   நீருமட்டும் வந்திடல... அதையும்தொடர்ந்துதான்...
உள்ளம், நல்ல உள்ளங்களும் வாசல்வந்ததே ! - ஒரு
   உதவிக்குநாம் இருக்கோமுன்னு சொல்லிவந்ததே !

சாதிஎன்ன? மதமுமென்ன? கேள்விகேட்கல - நம்ம
  சோகத்துக்கு தோள்கொடுத்த முகமும்மறக்கல !
'சோதி'யென ஒளிருமந்த உதவும்மனசுதான் ! - இங்கே
  இருண்டுபோன வாழ்க்கையில வெளிச்சம்காட்டுது !

நல்லஉள்ளம் இன்னும்பல இருப்பதைச்சொல்ல - பெரும்
  வெள்ளம்வந்து ஊருக்கெல்லாம் உணர்த்தவேணுமா?
சொல்லிடுவோம் நன்றியினை அப்புனிதருக்கெல்லாம் ! - இங்கே
  தெளிந்ததுவே மானுடத்தின் பெருமைநமக்கெல்லாம் !

4 comments:

  1. வாழ்த்துக்கள் பரிசு பெற்றமைக்கு.

    ReplyDelete
  2. வணக்கம்
    அண்ணா.

    தங்களின் கவிதையை பார்வைக்கு பதிவேற்றம் செய்து வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து சொல்லியமைக்காக நன்றி அண்ணா..கவிதை நன்றாக உள்ளது. அடுத்த போட்டிக்கு தயாராக இருங்கள்.வெற்றி பெறலாம்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அருமையான பா/கவிதை வரிகள்

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates