.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, August 2, 2015

ஜோக்ஸ் - பாகம் - 8

king jokes - prasad

"Bore அடிக்கும் போதெல்லாம் எங்கள் மன்னர் போர் செய்வார் ..."

 "ஓ ! அவ்ளோ பெரிய வீரனா?"

"நீங்க வேற...அரசவையில் அமர்ந்து அக்கப்போர் செய்வார் !"




"ஏற்கனவே திருமணமான நடிகையைக் கல்யாணம் பண்ணி ராணியாக்க வேண்டாம் என்று சொன்னதை மன்னர் கேட்கவில்லை..."

"இப்போ என்னாயிற்று?"

"நடிகையிடமிருந்து டைவோர்ஸ் கேட்டு ஓலை வந்திருக்கிறது !"



"தைரியமிருந்தால் நேருக்கு நேர் போருக்கு வா....அதை விட்டுவிட்டு யானைப் படையெல்லாம் கொண்டு போருக்கு வராதேன்னு எதிரி நாட்டு மன்னருக்கு நம் மன்னர் சொல்லியிருக்காரே ! ஏன்?"

"மன்னருக்கு யானை என்றால் பயமாம் !"

"!!!!"





"உங்கள் நாட்டில் மட்டும் கப்பம் சரியாகக் கட்டிவிடுகிறார்களாமே ! எப்படி ?"

"கப்பம் கட்டத் தவறினால் ராணியாரோடு வாய்ச் சண்டை போட வேண்டும் என தண்டனை உள்ளதே !:"

"???"




"மன்னா ! நான் உங்களுடைய பெரிய்ய fan...!"

"அப்படியா ! அப்படியென்றால் என் அருகில் வந்து எனக்கு சாமரம் வீசு !"

"???"

5 comments:

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates