.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, July 10, 2015

தலைக்கவசம் !


மலை போல உனை நம்பி மக்களுண்டு வீட்டினிலே !
தலைக் கவசம் அணியாமல் சுற்றலாமோ ரோட்டினிலே !

சிலை செய்து தலைவனென போற்றிடுவார் அரசியலில் !
தலைக் கவசம் அணியாமல் சிலையாக அவசரமா?

முல்லைக்குத் தேர்தந்த வள்ளலென உனைநினைத்தாய்!
செல்கையிலே வண்டிக்கே தலைக்கவசம் அணிவித்தாய் !

காவலரைக் கண்டவுடன் அஞ்சியதை அணிவதுமேன் ?
காலனுக்கு அஞ்சி இங்கே உனக்கெனவே அணிந்திடுவாய் !

மயிர் கொட்டும், வலிகூட்டும்...கழுத்தோடு என்றாலும்...
உயிர் காக்கும் என்பதைநீ மறவாதே உணர்ந்திடுவாய் !

சொகு சான கவசம் அதைத் தொழில்நுட்பம் தரும்வரையில்
'பிகு' ஏதும் செய் யாமல்  தலைக்கவசம் அணிந்திடுவாய் !

4 comments:

  1. நமக்கெனவே அணிந்திடுவோம்...

    ReplyDelete
    Replies
    1. கவிதையின் 'பன்ச்'- சை கருத்தாய் சொன்ன டி.டி க்கு நன்றி !

      Delete
  2. உண்மையின் வெளிப்பாடு உங்கள் கவிதை! நன்று!

    ReplyDelete
    Replies
    1. புலவர் ஐயாவின் வரவு எனக்குப் பெருமை ! நன்றிகள் ஐயா..! தொடர்ந்து வரவும் !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates