சுத்தமே உணவினைப் போடும்...
என்றொரு பழமொழி சொன்னார் !
நித்தமும் அதன்படி நடக்க...
நினைக்கவும் மறந்தே போனார் !
வீதியின் நெரிசல் நடுவில்...
குப்பையின் உண்டியல் இருக்கும் !
பாதிமேல் குப்பைகள் அதனை
சுற்றிதான் பரவியேக் கிடக்கும் !
புகைவண்டி பயணம் போவார் !
பொழுதினைக் கழிக்கவேத் தின்பார் !
புகைஊதி சிலரும் போவார் !
குப்பையை வண்டியில் விடுவார் !
இதம்தரும் காற்றைத் தேடி...
கடற்கரை பக்கம் போவார் !
தடம்பதி மண்ணின் அழகை..
குப்பையால் தானே மறைப்பார் !
சாலையில் செல்லும் போது...
எங்கிலும் உழிழ்ந்தே போவார் !
வேலைக்கு செல்வோர் எல்லாம்
பயந்துதான் ஓரம் போவார் !
சுற்றிலும் சூழ்ந்திடும் குப்பை
புதுப்புது நோயுண் டாக்கும் !
சுத்தமே சுகங்கள் சேர்க்கும் !
சற்றுநாம் தெளிந்திட வேண்டும் !
குப்பையை இடுவோர் தானே
சுத்தமும் செய்திட வேண்டும் !
தப்பினை உணரவும் வேண்டும் !
தூய்மையைப் போற்றிட வேண்டும் !
என்றொரு பழமொழி சொன்னார் !
நித்தமும் அதன்படி நடக்க...
நினைக்கவும் மறந்தே போனார் !
வீதியின் நெரிசல் நடுவில்...
குப்பையின் உண்டியல் இருக்கும் !
பாதிமேல் குப்பைகள் அதனை
சுற்றிதான் பரவியேக் கிடக்கும் !
புகைவண்டி பயணம் போவார் !
பொழுதினைக் கழிக்கவேத் தின்பார் !
புகைஊதி சிலரும் போவார் !
குப்பையை வண்டியில் விடுவார் !
இதம்தரும் காற்றைத் தேடி...
கடற்கரை பக்கம் போவார் !
தடம்பதி மண்ணின் அழகை..
குப்பையால் தானே மறைப்பார் !
சாலையில் செல்லும் போது...
எங்கிலும் உழிழ்ந்தே போவார் !
வேலைக்கு செல்வோர் எல்லாம்
பயந்துதான் ஓரம் போவார் !
சுற்றிலும் சூழ்ந்திடும் குப்பை
புதுப்புது நோயுண் டாக்கும் !
சுத்தமே சுகங்கள் சேர்க்கும் !
சற்றுநாம் தெளிந்திட வேண்டும் !
குப்பையை இடுவோர் தானே
சுத்தமும் செய்திட வேண்டும் !
தப்பினை உணரவும் வேண்டும் !
தூய்மையைப் போற்றிட வேண்டும் !
தெளிந்திட வேண்டும்...
ReplyDeleteஎல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!
ReplyDelete
ReplyDeleteஉழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம் (மே 1) நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com